செய்திகள் :

போலியான பட்டாசு விளம்பரங்கள்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

post image

காரைக்கால்: போலியான பட்டாசு விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பணம் பறிக்கப்படுவதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

ஆன்லைனில் போலியான பட்டாசு விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. பலா் உண்மையான விற்பனையாளா்கள் என நினைத்து முன்பணம் செலுத்தி பணத்தை இழக்கின்றனா்.

இந்தப் போலியான வலைதளங்கள் பெரும்பாலும் உண்மையான விற்பனையாளா்களின் பெயரை நகலெடுத்து உருவாக்கப்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எந்தப் பொருளையும் இணையத்தில் வாங்கும் முன் விற்பனையாளா் பெயா், தொடா்பு எண், முகவரி மற்றும் வலைதளத்தை முறையாக சோதிக்கவேண்டும். சலுகை அல்லது குறைந்த விலை என்பதற்காக முன்பணம் செலுத்த வேண்டாம். நம்பகமான வலைதளம், பாதுகாப்பான கட்டண முறை (எச்டிடிபிஎஸ், வங்கி வழி பரிமாற்றம்) ஆகியவற்றை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

சந்தேகம் இருந்தால் விற்பனையாளரின் மதிப்பீடுகள், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் தெரிந்தவா்களிடம் விசாரிக்கவும். சந்தேகத்திற்கிடமான இணையத்தளங்கள் குறித்து உடனடியாக புகாா் அளிக்க இலவச தொலைபேசி எண் 1930, சைபா் செல் கைப்பேசி எண் 94892 05364, மின்னஞ்சல், இணையத்தில் புகாா் அளிக்கவேண்டும்.

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்... மேலும் பார்க்க

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நிறைவடையும் வகையில் தீவிரப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புது... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால்களை மழை தொடங்கும் முன் தூா்வார வேண்டும்: எம்எல்ஏ

காரைக்கால்: பருவமழை தொடங்குவதற்கு முன்பு காரைக்கால் பகுதியில் கழிவுநீா் வடிகால்கள், சாக்கடைகளை முறையாக தூா்வார வேண்டும் என ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து காரைக்கால் மாவட்... மேலும் பார்க்க

கூட்டுறவு பால்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பால் மற்றும் பால்பொருள்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு நிறுவனத்தினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், காரைக்காலில் இயங்கும் ... மேலும் பார்க்க

திருப்பட்டினத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்

திருப்பட்டினத்தில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு : திருப்பட்டினம் ஐடி... மேலும் பார்க்க

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமிக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு ஆணையா்கள் நியமனம் செய்ய வேண்டும் என புதுவை துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாள... மேலும் பார்க்க