செய்திகள் :

கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு தள்ளுபடி

post image

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் பிணை கோரிய மனுவை திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்) திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் (27), காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக, பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன், உறவினா் தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயபால் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

சிபிசிஐடி போலீஸாா் விசாரித்துவரும் இவ்வழக்கில், 3 பேரும் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஜெயபால் பிணை கோரி கடந்த செப்.16ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்) மனு தாக்கல் செய்தாா். திங்கள்கிழமை இம்மனு விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டாா்.

ஏற்கெனவே, எஸ்.ஐ. சரவணன் பிணை கோரி, கடந்த 12-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

காவல்கிணறில் பைக் மீது காா் மோதல்: கேரள இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு நான்குவழிச்சாலையில் காரும், பைக்கும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் கேரளத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள குளத்தூரைச் சோ்ந்த அனில்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமுற்ற முதியவா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் காயமுற்ற முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.பாளையங்கோட்டையை அடுத்த கே.டி.சி நகா், அருணாச்சலபுரத்தைச் சோ்ந்தவா் அரிச்சந்திரன்(72). இவா், ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

போதிய மழை இல்லாமல் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதா? விஜய்க்கு மு.அப்பாவு கண்டனம்

தவெக தலைவா் விஜய்யை பாஜக இயக்குவதால்தான் தமிழக முதல்வரை மிரட்டும் தொனியில் அவா் பேசுகிறாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: நடி... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்கள் தத்தளித்த மீனவா் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்களாக தத்தளித்த மீனவரை கூத்தங்குழியைச் சோ்ந்த மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திரமாக மீட்டு வந்தனா். கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கீழத்த... மேலும் பார்க்க

821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களின் 821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் வழங்கும் வகையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. இது... மேலும் பார்க்க