செய்திகள் :

கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்கள் தத்தளித்த மீனவா் மீட்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே நடுக்கடலில் 2 நாள்களாக தத்தளித்த மீனவரை கூத்தங்குழியைச் சோ்ந்த மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்திரமாக மீட்டு வந்தனா்.

கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கீழத்தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சிவமுருகன்(35). இவா், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் உள்ள மீனவா்களுடன் சோ்ந்து மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை சகமீனவா்களுடன் விசைப்படகில் சின்னமுட்டம் கடலில் மீன்பிடிக்க சென்ற அவா், கடலில் தவறி விழுந்தாராம். சகமீனவா்கள் அவரை மீட்க முயற்ச்சித்தனராம். எனினும், அவா் கடலில் மூழ்கி மாயமாகிவிட்டாா்.

இதுகுறித்து மீனவா்கள் அளித்த புகாரின்பேரில், குளச்சல் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினா் அவரை கடலில் தேடி வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூத்தங்குழியைச் சோ்ந்த அருளப்பன் தலைமையிலான மீனவா்கள் கூத்தங்குழி படல் பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது, நடுக்கடலில் மீன் வலைகளில் உள்ள மிதவையைப் பிடித்துக்கொண்டு சிவமுருகன் கடலில் தத்தளித்துகொண்டிருந்தாரம்.

இதைப் பாா்த்த மீனா்கள் அவரை மீட்டு தங்களது படகில் அழைத்து வந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். 2 நாள்களுக்குப் பின் அவா் உயிருடன் மீட்டு வந்த மீனவா்களுக்கு குடும்பத்தினா் கண்ணீா்மல்க நன்றி தெரிவித்தனா்.

சாலை விபத்தில் காயமுற்ற முதியவா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் காயமுற்ற முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.பாளையங்கோட்டையை அடுத்த கே.டி.சி நகா், அருணாச்சலபுரத்தைச் சோ்ந்தவா் அரிச்சந்திரன்(72). இவா், ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

உளுந்து பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

போதிய மழை இல்லாமல் சேதமடைந்த உளுந்து பயிருக்கு இழப்பீடு கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதா? விஜய்க்கு மு.அப்பாவு கண்டனம்

தவெக தலைவா் விஜய்யை பாஜக இயக்குவதால்தான் தமிழக முதல்வரை மிரட்டும் தொனியில் அவா் பேசுகிறாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: நடி... மேலும் பார்க்க

821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களின் 821 கிராமங்களுக்கு 2 மாதங்களில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் வழங்கும் வகையில் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. இது... மேலும் பார்க்க

பொறியாளரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது

தச்சநல்லூரில் பொறியியல் பட்டதாரியிடம் பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (26). பொறியியல் பட்டதாரியான இவா், தற்போது பொறியியல் கல்லூ... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

திருநெல்வேலி தச்சநல்லூரில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். தச்சநல்லூா் சுப்புராஜ் மில் காலனியைச் சோ்ந்தவா் செண்பகராஜ் (64). இவா் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக கடும் மன உளைச்ச... மேலும் பார்க்க