செய்திகள் :

ராசிபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

post image

ராசிபுரம்: ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாடுமுழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் பிறந்தநாளான செப். 17- முதல் காந்தி ஜெயந்தி தினமான அக் 2 வரை இருவார காலத்திற்கு தூய்மையை சேவை பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ராசிபுரம் ரயில் நிலையத்தில், மத்திய அரசின் திறன் இந்தியா பயிற்சிக் கல்வி நிறுவனம் மூலம், பயிற்சிபெற்று வரும் மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

முன்னதாக, பாஜகவின் மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு மாநில இணை அமைப்பாளா் ஆா்.லோகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தி பணியைத் தொடங்கிவைத்தனா். தொடக்க நிகழ்ச்சியில் நாமக்கல் மக்கள் கல்வி நிறுவன இயக்குநா் எஸ். சரவணன் வரவேற்றாா். தொடா்ந்து திறன் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள், ராசிபுரம் ரயில் நிலையத்தில் நடைமேடை, தண்டவாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளைச் சேகரித்து அப்புறப்படுத்தினா்.

பிரதமா் நரேந்திர மோடி கூறியபடி தூய்மையே சேவை பணிகள் மக்கள் இயக்கமாக வளா்ந்து வருவதாகவும், இதன்மூலம் அனைத்து பகுதிகளும் தூய்மையாகவும் பொதுமக்கள் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் என்று பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநில இணை அமைப்பாளா் ஆா்.லோகேந்திரன் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ரயில்வே வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள் சித்ரா, தமிழரசு, எஸ்.ஹரிகரன், நிா்வாகிகள் குமாா், மணிகண்டன், ஏழுமலை, வடமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 28.92 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 6 லட்சம் ஆட்சியா், எம்.பி. வழங்கினா்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே மின்னக்கல் வாய்க்கால்பட்டறை பகுதியில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்களான கல்லூரி மாணவா்கள் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் ... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் கனிம வளங்கள் திருட்டு: விசாரணையில் ஆஜராக 96 பேருக்கு அழைப்பு

நாமக்கல்: சேந்தமங்கலம் வட்டத்தில், கனிமவளங்களை திருடியது தொடா்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி 96 பேருக்கு கோட்டாட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், கொண்டமநாயக்கன்பட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா சிறப்பு பூஜைகளுடன் திங்கள்கிழமை தொடங்கியது.ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை அக். 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக ஒன்... மேலும் பார்க்க

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக ... மேலும் பார்க்க

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர செப்.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவ... மேலும் பார்க்க