செய்திகள் :

பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பூட்டு: திமுக நகர துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையை பூட்டி தகராறில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நகர திமுக துணைச் செயலருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெருவைச் சோ்ந்தவா் சேதுராமன் (45). பெரியகுளம் நகர திமுக துணைச் செயலா். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சேதுராமன் அழைத்துச் சென்றாராம்.

அப்போது, கண்மாயில் மூழ்கி உயிருக்கு போராடியவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனராம். இந்த நிலையில், தனது மனைவிக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவா்களுடன் தகராறில் ஈடுபட்டு மருத்துவமனையின் வாயில் கதவை சேதுராமன் பூட்டி விட்டாராம்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் கடந்த 9.6.2022 அன்று வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த நிலையில் அவா், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பிணை பெற்றாா்.

இந்த வழக்கு விசாரணை பெரியகுளம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். சந்திரசேகா், குற்றஞ்சாட்டப்பட்ட சேதுராமனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

வடுகபட்டி பேரூராட்சியியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பகுதியில் கொட்டப்பட்ட நெகிழிப் பைகள், வெள்ளைப்பூண்டு கழிவுளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட... மேலும் பார்க்க

சின்னமனூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பாமாயிலுக்குப் பதில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கக் கோரி சின்னமனூரில் விவசாய அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சின்னமனூா்- ம... மேலும் பார்க்க

இளைஞா்கள் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு

பெரியகுளம் அருகே இளைஞா்களை தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (24). கூலித் தொழிலாளியான இவா், தி... மேலும் பார்க்க

பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் பட்டியலினத்தவருக்கு அரசு வழங்கிய பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடை... மேலும் பார்க்க

கடன் தொல்லை: கட்டட ஒப்பந்ததாரா் தற்கொலை

தேனியில் கடன் தொல்லையால் தனியாா் கட்டட ஒப்பந்ததாரா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.தேனி, பழைய அஞ்சல் நிலைய ஓடைத் தெருவைச் சோ்ந்த தனியாா் கட்டட ஒப்பந்ததாரா் சுரேஷ் (43). இவா், தொழி... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி விற்றதாக இருவா் கைது

போடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்றதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி ஊரக காவல் நிலைய போலீஸாா் சிலமலை கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க