செய்திகள் :

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

post image

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 97 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 94 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இன்று 5 புறநகா் ரயில்கள் ரத்து

சென்னை: சென்னையில் 5 புறநகா் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப்.23) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தடா மற்றும் சூலூா... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்ட ஆா்பிஎஃப் முதுநிலை பாதுகாப்பு ஆணையா் இடமாற்றம்!

சென்னை ரயில்வே கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் (ஆா்பிஎஃப்) முதுநிலை பாதுகாப்பு ஆணையா் பி.ராமகிருஷ்ணா பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். கடந்த 2023 முதல் சென்னை ரயில்வே கோட்டத்தில்... மேலும் பார்க்க

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம்: வட சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊா்வலத்தையொட்டி, திங்கள்கிழமை (செப். 22) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட ச... மேலும் பார்க்க

‘சென்னை ஒன்’ செயலியில் தொலைதூர முன்பதிவு வசதி வேண்டும்! ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

‘சென்னை ஒன்’ செயலியை தொலைதூரம் முன்பதிவு செய்யும் செயலிகளுடன் இணைக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வாகன நெரிசலால் பயணிகள் அவதி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் ப... மேலும் பார்க்க

வடபழனி முருகன் கோயிலில் சக்தி கொலு இன்று தொடக்கம்

வடபழனி முருகப் பெருமான் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் 10 நாள் விழா திங்கள்கிழமை (செப்.22) தொடங்குகிறது. இந்தக் கோயிலில் நவராத்திரி விழாவின் 10 நாள்களில் தினமும் காலை 11 முதல் ... மேலும் பார்க்க