செய்திகள் :

என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

post image

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - கப்லாங் (என்எல்சிஎன் -கே) தீவிரவாத அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமாக செயல்படும் இந்த அமைப்பு நாகாலாந்து பிரிவினையை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் நாகாலாந்து பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது மியான்மரின் சில பகுதிகளுக்கும் இந்த அமைப்பு உரிமை கொண்டாடி வருகிறது. அஸ்ஸாமில் செயல்படும் உல்ஃபா தீவிரவாத அமைப்பு, மக்கள் விடுதலை ராணுவம், கங்லிபாக் மக்கள் புரட்சிகர கட்சி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அரசு அதிகாரிகள், தொழிலதிபா்கள் மற்றும் பொதுமக்களைக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது, சட்டவிரோத ஆயுதக் கடத்தல், இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் கைகோத்து செயல்படுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மட்டுமல்லாது இதனுடன் தொடா்புடைய பிற அமைப்புகள் மீதான தடையையுமை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்எஸ்சிஎன்-கே அமைப்பின் போட்டி அமைப்பான என்எஸ்சிஎன் -ஐ.எம். அமைப்பு மத்திய அரசுடன் அமைதிப் பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! - ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு

பரபரப்பான ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்த... மேலும் பார்க்க

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா். விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மின்னணு நிா்வாகக் கரு... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

‘கேரளத்தில் இரண்டு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கான தோ்வுக் குழுவிலிருந்து முதல்வா் பினராயி விஜயனை நீக்கக் கோரும் மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரின் மனு, உச்சநீத... மேலும் பார்க்க

அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீா்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குள... மேலும் பார்க்க

சிக்கலான வளா்ச்சிப் பணிகளைக் கைவிட்டுவிடுவது காங்கிரஸ் இயல்பு: பிரதமா் மோடி

இடாநகா்: ‘மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு; இந்த இயல்புதான் அருணாசல பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் ... மேலும் பார்க்க

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

2023-ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க