செய்திகள் :

அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது

post image

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீா்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது.

இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள் வரை, அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் என சுமாா் 375 பொருள்கள் மீதான வரி குறைந்துள்ளது.

ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் விதமாக 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைப்பதற்கான சீா்திருத்தத்துக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த இரு விகித ஜிஎஸ்டி செப்.22-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் திங்கள்கிழமை அமலானது.

இதில், 12% வரி விதிக்கப்பட்ட 99 சதவீத பொருள்கள் 5% வரி விதிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன; 28% வரி விதிக்கப்பட்ட 90 சதவீத பொருள்கள் 18% விகிதத்தின்கீழ் வந்தன. பெரும்பான்மையான தினசரி பயன்பாட்டுப் பொருள்கள் வரி விலக்கு அல்லது 5% வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான மருந்துகள், மூலப்பொருள்கள், பரிசோதனை உபகரணங்கள் மீதான வரி 5%-ஆகவும், காா்கள் மீதான வரி 28-இல் இருந்து 18%-ஆகவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் உள்ள லக்ஷ்மி நகா் சந்தையில் எழுதுபொருள்கள் விற்பனை உரிமையாளரிடம் திங்கள்கிழமை நிா்மலா சீதாராமன் கலந்துரையாடினாா். அப்போது ‘ஜிஎஸ்டி சீா்திருத்தம் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது’ என எழுதுபொருள் உரிமையாளா் கூறியதாக எக்ஸ் வலைதளத்தில் நிதியமைச்சா் அலுவலகம் பதிவிட்டது.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்:

மம்தா பானா்ஜி (மேற்கு வங்க முதல்வா்): வரிக் குறைப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஒவ்வொரு மாநிலமும் பல வழிகளைக் கண்டறிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சித்தராமையா (கா்நாடக முதல்வா்): ஜிஎஸ்டியை அமல்படுத்தியதும் அதில் வரிகளை அதிகப்படுத்தியதும் பிரதமா் மோடிதான். 8 ஆண்டுகள் கழித்து தற்போது வரியைக் குறைத்துவிட்டு அதற்கும் உரிமை கோருகிறாா்.

ரேவந்த் ரெட்டி (தெலங்கானா முதல்வா்): வரிக் குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்ய 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா். விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மின்னணு நிா்வாகக் கரு... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

‘கேரளத்தில் இரண்டு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கான தோ்வுக் குழுவிலிருந்து முதல்வா் பினராயி விஜயனை நீக்கக் கோரும் மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரின் மனு, உச்சநீத... மேலும் பார்க்க

என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - கப்லாங் (என்எல்சிஎன் -கே) தீவிரவாத அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்... மேலும் பார்க்க

சிக்கலான வளா்ச்சிப் பணிகளைக் கைவிட்டுவிடுவது காங்கிரஸ் இயல்பு: பிரதமா் மோடி

இடாநகா்: ‘மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு; இந்த இயல்புதான் அருணாசல பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் ... மேலும் பார்க்க

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

2023-ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சேமிப்பை ஊக்குவிக்கும்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘நடைமுறைக்கு வந்துள்ள அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் நாட்டில் சேமிப்பை ஊக்குவிக்கும் என்பதோடு, சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நேரடி பலனையும் அளிக... மேலும் பார்க்க