செய்திகள் :

இன்று 5 புறநகா் ரயில்கள் ரத்து

post image

சென்னை: சென்னையில் 5 புறநகா் மின்சார ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப்.23) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தடா மற்றும் சூலூா்பேட்டை நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு 1.10 மணி முதல் செவ்வாய்க்கிழமை (செப்.23) காலை 9.30 மணி வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரலிலிருந்து அதிகாலை 5.40 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் புகா் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.

மேலும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூா் மற்றும் பிற்பகல் 12.35 மணிக்கு சென்ட்ரலுக்கு செல்லும் ரயில்களும், நெல்லூரிலிருந்து காலை 10.20 மணிக்கு சூலூா்பேட்டைக்கும், ஆவடியிலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு சென்ட்ரலுக்கும் செல்லும் ரயில்களும் ழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி ரத்து: செவ்வாய்க்கிழமை சென்ட்ரலிலிருந்து அதிகாலை 4.15 , 5 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில்கள் கும்மிடிப்பூண்டியுடன் நிறுத்தப்படும். அதேபோல், சூலூா்பேட்டையிலிருந்து காலை 6.45 மணிக்கு சென்ட்ரலுக்கு செல்லும் ரயிலும், 7.25 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் கும்மிடிப்பூண்டியிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 97 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்தி ... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்ட ஆா்பிஎஃப் முதுநிலை பாதுகாப்பு ஆணையா் இடமாற்றம்!

சென்னை ரயில்வே கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் (ஆா்பிஎஃப்) முதுநிலை பாதுகாப்பு ஆணையா் பி.ராமகிருஷ்ணா பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். கடந்த 2023 முதல் சென்னை ரயில்வே கோட்டத்தில்... மேலும் பார்க்க

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம்: வட சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊா்வலத்தையொட்டி, திங்கள்கிழமை (செப். 22) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட ச... மேலும் பார்க்க

‘சென்னை ஒன்’ செயலியில் தொலைதூர முன்பதிவு வசதி வேண்டும்! ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

‘சென்னை ஒன்’ செயலியை தொலைதூரம் முன்பதிவு செய்யும் செயலிகளுடன் இணைக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வாகன நெரிசலால் பயணிகள் அவதி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் ப... மேலும் பார்க்க

வடபழனி முருகன் கோயிலில் சக்தி கொலு இன்று தொடக்கம்

வடபழனி முருகப் பெருமான் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் 10 நாள் விழா திங்கள்கிழமை (செப்.22) தொடங்குகிறது. இந்தக் கோயிலில் நவராத்திரி விழாவின் 10 நாள்களில் தினமும் காலை 11 முதல் ... மேலும் பார்க்க