செய்திகள் :

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

post image

நியூயாா்க்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசித்தாா்.

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத கூடுதல் வரி கடந்த மாதம் அமலான பிறகு முதல்முறையாக இருவரும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளாா். அப்போது பல்வேறு நாடுகளின் மூத்த தலைவா்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளாா்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வின் உயா்நிலை பொது விவாதம் செப். 23 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், செப். 23-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டிரம்ப் உரையாற்றவுள்ளாா். அவா் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசவிருப்பது இதுவே முதல் முறையாகும்.

பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு

முன்னதாக, அமெரிக்காவில் பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சா் டெஸ் லசாரோவை இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அந்த சந்திப்பின்போது அண்மையில் பிலிப்பின்ஸ் பிரதமா் ஃபொ்டினண்ட் மாா்கோஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமா் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியது குறித்தும் ஐ.நா. மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தாா்.

இந்த சந்திப்பு குறித்து டெஸ் லசாரோ கூறிகையில், ‘அரசியல், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் ஆலோசித்தேன்’ என்றாா்.

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: செப்.21-க்குப் பிறகான புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்

வாஷிங்டன்: உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்... மேலும் பார்க்க

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

மாஸ்கோ: ரஷியாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400-களை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

பெஷாவா்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வளாகத்தில் வெடிபொருள்கள் வெடித்து பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். எனினும் அந்நாட்டுப் போா் விமானங்கள் குண்டுகளை வீசியதால்தான், இந்த சம்பவம் ஏற்ப... மேலும் பார்க்க

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து!

இஸ்ரேலில் யூதர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை (செப். 22) சூரியன் மறைவுக்குப் பின் தொடங்கும் ரோஷ் ஹாஷனா(யூதர்களின் புத்தாண்டு) கொண்... மேலும் பார்க்க

நினைவேந்தலில் சார்லி கிர்க் மனைவி அருகில் நடனமாடிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் நினைவேந்தலில், அவரின் மனைவி அருகே டிரம்ப் நடனமாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அ... மேலும் பார்க்க

எச்1பி சர்ச்சைக்கு இடையே சீனாவின் கே விசா அறிமுகம்! இளைஞர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்கள்!

எச்1பி விசா கட்டண உயர்வுக்கு இடையே பட்டதாரிகளை ஈர்க்கும் ’கே விசா’வை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.சீன அரசு தற்போது வழங்கி வரும் 12 வகையான விசாக்களை காட்டிலும், கே விசாவில் பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக... மேலும் பார்க்க