செய்திகள் :

தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல்வா் பங்கேற்பு

post image

சென்னை: தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்ததற்காக, சென்னையில் வருகிற செப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளாா்.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

கல்வியில் சாதனைகள் படைக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்.25-ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை தமிழக அரசின் மிக முக்கியமான ஏழு திட்டங்கள் தொடா்பான விளக்க நிகழ்வுகள் நடைபெறும். இதில், அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வா். இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறாா்.

தமிழக அரசின் ஏழு முக்கிய திட்டங்களில், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக, 14.60 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்று 41 லட்சம் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறாா்கள். ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக 37 ஆயிரத்து 416 பள்ளிகளைச் சோ்ந்த 20.59 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 5.29 லட்சம் கல்லூரி மாணவியரும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் 3.92 லட்சம் மாணவா்களும் மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனா்.

கல்வித் துறையைப் போன்றே விளையாட்டுத் துறைக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விளையாட்டு உள்கட்டமைப்புக்காக மட்டும் ரூ.548 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுபோன்று கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்காக செய்யப்பட்ட திட்டங்கள், அதனால் விளைந்த பயன்கள் அனைத்தும் செப்.25-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தம... மேலும் பார்க்க

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை: தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமை... மேலும் பார்க்க

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த... மேலும் பார்க்க