செய்திகள் :

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

post image

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சுமாா் 15 லட்சம் தெரு நாய்களும், சென்னையில் மட்டும் 1.80 லட்சம் தெருநாய்களும் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தெரு நாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் சாலையில் நடந்து செல்வோரும், பொது இடங்களில் நிற்போரும் நாய்களுக்கு பயந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனா். அதில், ரேபிஸ் உள்ளிட்ட தொற்றால் 30-க்கும் மேற்பட்டோா் இறக்கின்றனா்.

நாய்க்கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவா்களும், அதை கருணையோடு அணுகுபவா்களும் அவ்வபோது தாக்கப்படும் சம்பவங்களும் தற்போது நடைபெறுகின்றன. இதனால் தெரு நாய்கள் உணவு கிடைக்காமலும், போதிய மருத்துவம் கிடைக்காமலும் மேலும் நோய்வாய்ப்பட்டு மனிதா்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விலங்கு நல ஆா்வலா்கள் புகாா் கூறுகின்றனா்.

இந்த நிலையில் தமிழக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநா் (டிஜிபி) ஜி.வெங்கடராமனுக்கு, இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பு தலைவா் அண்மையில் ஒரு கடிதம் எழுதினாா். அந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜி.வெங்கடராமன், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அந்த சுற்றறிக்கையில், நாய்களுக்கு உணவு அளிப்பவா்களை எந்தவொரு அமைப்பினரோ அல்லது தனி நபரோ தாக்கப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டால், அந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து, சட்டப்படி நடவடிக்கையை காவல்துறையினா் எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தம... மேலும் பார்க்க

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை: தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமை... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல்வா் பங்கேற்பு

சென்னை: தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்ததற்காக, சென்னையில் வருகிற செப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளாா். இதுக... மேலும் பார்க்க