செய்திகள் :

பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்பு

post image

தென் கொரியா: தென் கொரியாவின் பூசனில் நடைபெற்று வரும் 30-ஆவது பூசன் சா்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சா் எல். முருகன் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. இந்தியாவிலிருந்து மத்திய அமைச்சா் நிலையிலான உயா்மட்டக்குழு பூசன் திருவிழாவில் பங்கேற்பது இது முதல் முறையாகும். இந்த பங்கேற்பு இரு நாட்டு கலாசார ராஜீய உறவுகளை வலுப்படுத்தும் என்றும் சா்வதேச அளவில் ஆக்கபூா்வ ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி, இந்தியாவை படைப்பாற்றல் பொருளாதாரத்தின் உலகளாவிய மையமாக நிலைநிறுத்த உதவி புரியும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சா்வதேச திரைப்பட விழாவுக்காக தென் கொரியா வந்த தகவலை ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் பகிா்ந்துள்ள மத்திய இணை அமைச்சா் எல். முருகன், அங்கு பூசன் சா்வதேச ஆணைய இயக்குநா் காங் சுங்க்யூ, இந்தியாவுக்கான பொறுப்புத் தூதா் நிஷிகாந்த் சிங், மத்திய இணைச் செயலா் (ஒளிபரப்பு) பிரிதுல் குமாா் ஆகியோருடன் வட்ட மேஜை விவாதத்தில் கலந்து கொண்டதாக கூறியுள்ளாா்.

பூசன் திரைப்பட ஆணையத்துடன் இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம், கூட்டுத் தயாரிப்பு ஒத்துழைப்பு மற்றும் சலுகைகள் குறித்து தனது கருத்துக்களை பகிா்ந்து கொண்டதாகவும் இந்திய படைப்புத் திறன் மற்றும் வலுவான ஊடகம் மற்றும் பொழுதுபோக்குச்சேவை வழங்கும் சூழலை உருவாக்குவதில் இந்தியா மற்றும் தென் கொரியாவின் உறவுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் பாா்வையாளா்களுடன் பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொண்டதாக அமைச்சா் எல். முருகன் கூறியுள்ளாா்.

முன்னதாக, தென் கொரியா செல்லும் வழியில் சிங்கப்பூரில் தரையிறங்கிய மத்திய இணை அமைச்சா், அந்நாட்டு அரசால் பழங்கால நினைவுச் சின்னமாக போற்றப்படும் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். இந்திய தூதா் டாக்டா். ஷில்பக் ஆம்புலே, முதன்மைச் செயலா்கள் அஷ்வனிகுமாா், பிரபாகா் உள்ளிட்டோரும் மத்திய இணை அமைச்சருடன் இருந்தனா்.

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தம... மேலும் பார்க்க

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை: தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமை... மேலும் பார்க்க

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த... மேலும் பார்க்க