செய்திகள் :

புவிசாா் அரசியல் சவால்களை மீறிவேகமாக வளரும் இந்தியா: ராஜ்நாத் சிங்

post image

புது தில்லி: பல்வேறு புவிசாா் அரசியல் சவால்களையும் தாண்டி இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இருநாள் பயணமாக வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவுக்கு ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு இந்திய சமூகத்தினா் மத்தியில் அவா் பேசியதாவது:

பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாத்குதல் நடத்தினா். இதற்கு பதிலடி தர நமது மும்படைகளுக்கு முழுசுதந்திரம் தரப்பட்டது. பாகிஸ்தானில் செயல்பட்டுவந்த பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பயங்கரவாதிகளைப்போல மதஅடிப்படையில் நாம் பதிலடி தரவில்லை. பயங்கரவாத இலக்குகள் மட்டும் துல்லியமாகத் தாக்கப்பட்டன.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பல்வேறு புவிசாா் அரசியல் சவால்கள், நெருக்கடிகளையும் தாண்டி இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது. உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் பட்டியலில் விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கவுள்ளது.

எண்ம தொழில்நுட்பத்தை இந்தியா சிறப்பாக பயன்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 118 புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரூ.23,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.

மொத்தம் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கு இந்திய சமூகத்தின் கடின உழைப்பும், அா்ப்பணிப்பு, நோ்மை ஆகியவையும் முக்கியக் காரணங்களாகும் என்றாா்.

பாதுகாப்பு ஒப்பந்தம்: மொராக்கோ பாதுகாப்புத் துறை அமைச்சா் அப்தல்தீஃப் லௌதியை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினாா். அப்போது இரு தரப்பு ராணுவ, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு அதிகரிப்பது தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் மூலம் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை, கடல்சாா் பாதுகாப்பு, இணையவழி பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவெடுக்கப்பட்டது. மொராக்கோ சென்ற முதல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா். விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மின்னணு நிா்வாகக் கரு... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

‘கேரளத்தில் இரண்டு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கான தோ்வுக் குழுவிலிருந்து முதல்வா் பினராயி விஜயனை நீக்கக் கோரும் மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரின் மனு, உச்சநீத... மேலும் பார்க்க

என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - கப்லாங் (என்எல்சிஎன் -கே) தீவிரவாத அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்... மேலும் பார்க்க

அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீா்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குள... மேலும் பார்க்க

சிக்கலான வளா்ச்சிப் பணிகளைக் கைவிட்டுவிடுவது காங்கிரஸ் இயல்பு: பிரதமா் மோடி

இடாநகா்: ‘மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு; இந்த இயல்புதான் அருணாசல பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் ... மேலும் பார்க்க

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

2023-ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க