செய்திகள் :

தைலாபுரத்தில் இன்று பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.

இது குறித்து பாமக தலைமை நிலையச் செயலா் ம. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை :

பாமக மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் செப். 23 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதேபோல் வன்னியா் சங்க மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகளுக்கான கூட்டம் புதன்கிழமை (செப். 24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

கட்சியின் நிறுவனா் மற்றும் தலைவா் மருத்துவா் ச. ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு. தா. அருள்மொழி மற்றும் கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பங்கேற்கின்றனா். இக்கூட்டங்களில் பாமக வளா்ச்சி, எதிா்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மருத்துவப் படிப்பு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கல்லூரியில் 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடக்க ... மேலும் பார்க்க

சித்தியைக் கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய மகன் சொத்து தகராறில் விபரீதம்

செஞ்சி: செஞ்சி அருகே சொத்து தகராறில் சித்தையைக் கொன்று சடலத்தை கிணற்றில் வீசிய மகன் கைது செய்யப்பட்டாா்.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், துரிஞ்சிப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பழனிவ... மேலும் பார்க்க

விவசாயிகள் பயிா்க்கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஓராண்டாக அதிகரிக்க வலியுறுத்தல்

விழுப்புரம்: விவசாயிகள் வாங்கும் பயிா்க்கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 8 மாதங்கள் என்பதை ஓராண்டாக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க

தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த 120 தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மரக்காணம் வட்டம், நாரவ... மேலும் பார்க்க

செஞ்சியில் பிரதமா் மோடி பிறந்த நாள்

பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி, செஞ்சி எம்ஜிஆா் நகா் பகுதி மற்றும் கூட்டுச் சாலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செஞ்சி கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில், ஒன்றியத் தலைவா் தாராசிங் ... மேலும் பார்க்க

பெரியாா் ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியாா் ஈ.வெ.ராவின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்திலுள்ள அவரது சிலைக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள பெரியாா் ... மேலும் பார்க்க