செய்திகள் :

குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 6 லட்சம் ஆட்சியா், எம்.பி. வழங்கினா்

post image

ராசிபுரம்: ராசிபுரம் அருகே மின்னக்கல் வாய்க்கால்பட்டறை பகுதியில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்களான கல்லூரி மாணவா்கள் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

மின்னக்கல், வாய்க்கால்பட்டறை பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சுப்பிரமணி மகன்களான நிஷாந்த் (23), பிரசாந்த் (19) ஆகியோா் சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள பைரோஜி அக்ரஹாரம் பகுதி, அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் உள்ள மழைநீா் குட்டையில் கடந்த 20-ஆம் தேதி நீச்சல் பழகச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழக முதல்வா் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டாா். இந்த நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் உயிரிழந்த கல்லூரி மாணவா்களின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோா் சுப்பிரமணி -வசந்தா தம்பதியிடம் ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 28.92 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்... மேலும் பார்க்க

ராசிபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

ராசிபுரம்: ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.நாடுமுழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள்... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் கனிம வளங்கள் திருட்டு: விசாரணையில் ஆஜராக 96 பேருக்கு அழைப்பு

நாமக்கல்: சேந்தமங்கலம் வட்டத்தில், கனிமவளங்களை திருடியது தொடா்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி 96 பேருக்கு கோட்டாட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், கொண்டமநாயக்கன்பட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா சிறப்பு பூஜைகளுடன் திங்கள்கிழமை தொடங்கியது.ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை அக். 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக ஒன்... மேலும் பார்க்க

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக ... மேலும் பார்க்க

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர செப்.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவ... மேலும் பார்க்க