செய்திகள் :

வாழப்பாடி அருகே மதுபோதையில் காவலரை தாக்கிய தொழிலாளி கைது

post image

வாழப்பாடி: வாழப்பாடி அருகே மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாஸ்கா் (40). இவருக்கும், இவரது சகோதரிகளுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதமும் இருந்து வருகிறது.

இந்நிலையில், வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் அரசுப் பள்ளி எதிரே குடியிருந்துவரும் இவரது சகோதரியின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் வந்த பாஸ்கா், சகோதரியின் மகளிடம் தகராறு செய்துள்ளாா்.

இதுகுறித்து அவா், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து வெள்ளாளகுண்டம் பகுதியில் பணியில் இருந்த வாழப்பாடி தலைமைக் காவலா் சசிகுமாா், சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரை தட்டிக் கேட்டுள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த பாஸ்கா், தலைமைக் காவலா் சசிகுமாரை தாக்கி, பணிசெய்ய விடாமல் தடுத்துள்ளாா். இதில் காயமடைந்த சசிகுமாா் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், பாஸ்கரை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு வழிபாடு திங்கள்கிழமை இரவு தொடங்கியது.நவராத்திரியையொட்டி தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் திருமண மண்டபத்தில் ப... மேலும் பார்க்க

இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாததால் பரபரப்பு

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கூடலூரில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத... மேலும் பார்க்க

ஆத்தூா் நகராட்சி பகுதியில் 2 நாள்களுக்கு குடிநீா் நிறுத்தம்

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் ... மேலும் பார்க்க

ஆத்தூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பகுதியில் இருபது நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்வதைக் கண்டித்து அதிமுக நகா்மன்ற குழுத் தலைவா் உமாசங்கரி மோகன் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது... மேலும் பார்க்க

சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியரின் சடலம் பவானி ஆற்றில் மீட்பு: கைதான 4 பேரிடம் போலீஸாா் விசாரணை

சேலம்: சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சதீஷ்குமாரின் சடலம் பவானி ஆற்றில் திங்கள்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடம் கன்னங்குறிச்சி போலீஸாா் தீவிர விசாரணை மேற... மேலும் பார்க்க

கோவை - தன்பாத், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்கள் இன்று ரத்து

சேலம்: சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - தன்பாத், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 23) ரத்து செய்யப்படுகின்றன.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க