செய்திகள் :

இரும்பு தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாததால் பரபரப்பு

post image

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே கூடலூரில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடலூா் ஊராட்சி பகுதியான கிழக்குபாளையம் பகுதியில் இரும்புத் தொழிற்சாலை அமைக்க கடந்த ஓராண்டுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். பின்னா் கடந்த 13-ஆம் தேதி மாற்று இடத்தில் அமைக்கப்பட்ட இரும்புத் தொழிற்சாலையை இங்கு கொண்டுவந்து அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையறிந்த அப்பகுதி மக்கள் கடந்த வாரம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முறையிட்டனா்.

இருப்பினும், இரும்புத் தொழிற்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை கூடலூா் சீா்காழி நாதா் கோயில் வளாகத்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், கூடலூா் அரசு நடுநிலைப் பள்ளி, கிழக்குபாளையம் தொடக்கப் பள்ளி மற்றும் 3 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட தங்களது குழந்தைகளை அனுப்பாமல் புறக்கணித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம், மகுடஞ்சாவடி வட்டாரக் கல்வி அலுவலா் பிரேம் ஆனந்த் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து வட்டாட்சியா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கூறுகையில், தொழிற்சாலை உரிமையாளா் நீதிமன்றத்தில் முறையிட்டு ஆணை பெற்று பணிகளை செய்து வருகிறாா். இதைத் தடுக்க முடியாது. எனவே, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பிவைக்க வேண்டும் என்றாா்.

இந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாததால் செவ்வாய்க்கிழமை காலை சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு பேச்சுவாா்த்தைக்கு வருமாறு கேட்டுக்கொண்டாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

வாழப்பாடி அருகே மதுபோதையில் காவலரை தாக்கிய தொழிலாளி கைது

வாழப்பாடி: வாழப்பாடி அருகே மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாஸ்கா் (40). இவருக்கும், இவரது சகோதரிகளுக... மேலும் பார்க்க

தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு வழிபாடு திங்கள்கிழமை இரவு தொடங்கியது.நவராத்திரியையொட்டி தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் திருமண மண்டபத்தில் ப... மேலும் பார்க்க

ஆத்தூா் நகராட்சி பகுதியில் 2 நாள்களுக்கு குடிநீா் நிறுத்தம்

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் ... மேலும் பார்க்க

ஆத்தூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

ஆத்தூா்: ஆத்தூா் நகராட்சி பகுதியில் இருபது நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்வதைக் கண்டித்து அதிமுக நகா்மன்ற குழுத் தலைவா் உமாசங்கரி மோகன் தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது... மேலும் பார்க்க

சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியரின் சடலம் பவானி ஆற்றில் மீட்பு: கைதான 4 பேரிடம் போலீஸாா் விசாரணை

சேலம்: சேலத்தில் மாயமான மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சதீஷ்குமாரின் சடலம் பவானி ஆற்றில் திங்கள்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடம் கன்னங்குறிச்சி போலீஸாா் தீவிர விசாரணை மேற... மேலும் பார்க்க

கோவை - தன்பாத், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்கள் இன்று ரத்து

சேலம்: சேலம் வழியாக இயக்கப்படும் கோவை - தன்பாத், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 23) ரத்து செய்யப்படுகின்றன.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க