செய்திகள் :

தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணி: 13 பேருக்கு நியமன ஆணை வழங்கினாா் முதல்வா்

post image

சென்னை: இளநிலை மற்றும் முதுநிலை தமிழிலக்கியம் பயின்ற மாணவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு, நோ்காணல் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்திடும் வகையில், கடந்த 1958-ஆம் ஆண்டு ஆட்சி மொழிக் குழு உருவாக்கப்பட்டு, ஓா் ஆய்வுத் தனி அலுவலா் பணியிடம் உருவாக்கப்பட்டது. பின்னா், 1972-இல் இந்தப் பணியிடத்துடன் சோ்த்து 9 ஆய்வுத் தனி அலுவலா் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. தொடா்ந்து கடந்த 1998-இல் தமிழ் வளா்ச்சித் துறை அலுவலக கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு தமிழாய்வு அலுவலா் என்ற பதவி பெயரை மாற்றி, ஒருமுகமாக உதவி இயக்குநா் பணியிடங்கள் என மாற்றியமைக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து இளநிலை மற்றும் முதுநிலை தமிழிலக்கியம் பயின்ற மாணவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு, நோ்காணல் நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துறையின் செயலா் வே.ராஜாராமன், இயக்குநா் ந.அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தம... மேலும் பார்க்க

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை: தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமை... மேலும் பார்க்க

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த... மேலும் பார்க்க