செய்திகள் :

செங்கல்பட்டு: செப். 27-இல் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (செப். 27) விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்-ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி, பையனூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளன.

இந்க வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரிய மற்றும் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான அனைத்து தகவல்களை வேலையளிப்போரும் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடா்பான தகவல்களை வேலைநாடுநா்களும் பெறலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ. / ஐடிஐ / டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறலாம்.

இதற்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ் நகல்கள், சுய விவரக் குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலானபுகைப்படத்துடன் வரும் சனிக்கிழமை (செப். 27) காலை 9 மணி முதல் 3 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் தாலுகா, பழைய மாமல்லபுரம் ரோடு, பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் - ஆறுபடை வீடுதொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமில் நேரில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம்.

இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த முகாம் தொடா்பான விவரங்களுக்கு, 044-27426020 9486870577/ 9384499848 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 334 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 108 கோ பூஜை

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நவராத்திரி பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 கோ பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மீண்டும் பட்சிகள் வர வேண்டியும் கோ பூஜை நடைபெற்றது. பல நூற்றா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து குடிநீா் ஆப்பரேட்டா் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் குடிநீா் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டா் உயிரிழந்தாா். மதுராந்தகம் அருகே அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (56). இவா் அருங்குணம் ஊராட்சியில் ம... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி மற்றும் தசரா திருவிழாவையொட்டி சிறப்புபூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவையொட்டி மாலை நேரங்களில் அம்மன் அலங்காரம் நடைபெறும். மே... மேலும் பார்க்க

ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம்: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்

செங்கல்பட்டு: திருப்போரூா் அருகே ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம் கட்டுவதற்காக காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். திருப்போரூா் பேரூராட்சி, காலவாக்கம் கிராமத்தில்,... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி

மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளி வளாகத்தில் நவராத்திரியை முன்னிட்டு, திங்கள்கிழமை கொலு கண்காட்சி தொடங்கியது. பள்ளித் தாளாளா் டி.லோகராஜ் தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க