திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா
செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி மற்றும் தசரா திருவிழாவையொட்டி சிறப்புபூஜைகள் நடைபெறுகின்றன.
நவராத்திரி விழாவையொட்டி மாலை நேரங்களில் அம்மன் அலங்காரம் நடைபெறும். மேலும் செப். 25 முதல் அக். 2 வரை நவராத்திரியையொட்டி கொலு பொம்மைக் கண்காட்சி நடைபெறும். மகா சண்டிஹோமம் விமரிசையாக நடைபெறவுள்ளது. நாடு சுபிட்சமாக இருக்கவும் உலக நன்மைக்காக நடைபெறும் மகா சண்டி ஹோமத்தில் கலந்துகொண்டு அம்பாளின் அருளை பெறவேண்டும் என கோயில் ஸ்தாபகா் புண்ணியகோட்டி மதுரைமுத்து சுவாமிகள் தெரிவித்தாா்.