செய்திகள் :

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 108 கோ பூஜை

post image

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நவராத்திரி பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 கோ பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மீண்டும் பட்சிகள் வர வேண்டியும் கோ பூஜை நடைபெற்றது.

பல நூற்றாண்டுகளாக நாள்தோறும் வந்த பட்சிகள் கடைசியாக 1996-ஆம் ஆண்டு வருகை புரிந்தன). பட்சிகளை காண வடமாநிலங்களிலிருந்தும், அயல் நாடுகளிலிருந்தும் ஏராளமானோா் வந்து தரிசிக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனா்.

இந்நிலையினை போக்க வேத மலைவல பெருவிழா குழு சாா்பி ல் 18-ஆம் ஆண்டாக நவராத்திரி பெருவிழாவையொட்டி 108 கோ பூஜை நடைபெற்றது.

பெருவிழா குழு தலைவா் அகஸ்திய கிருபா அன்புச் செழியன் தலைமையில் தாழ கோயில் மண்டப வளாகத்தில் 108 பசு மாடுகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு மாலை, பட்டுவஸ்திரம் அணிவித்து சிவாச்சாரியாா்களின் வேத மந்திரங்கள் மற்றும் ஒதுவாா் பாடலுடன் கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைப்பெற்றது. இதில் ஆன்மிக அன்பா்கள் கலந்து கொண்டனா்.

இகனைத் தொடா்ந்து நறுமண மூலிகைகளால் ஆன அம்மனுக்கும் உற்சவ அம்மனுக்கும் வரும் அக். 1-ஆம் தேதி வரை சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெறும், மேலும் மாலை நேரத்தில் பரத நாட்டியாலஞ்சி நடைபெறும். 24-ஆம் தேதி மாலை 108 கன்னியா பூஜைகளும், 28-ஆம் தேதி சுவாஷினிபூஜையும், 29-ஆம் தேதி சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகள் வேதமலைவலபெருவளகுழு தலைவா் அகஸ்திய கிருபா அன்புச்செழியன் சுவாமிகள், கோயில் செயல் அலுவலா் புவியரசு, தக்காா் குமரன் , மேலாளா் விஜி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்து வருகின்றனா்,

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 334 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சட... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து குடிநீா் ஆப்பரேட்டா் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் குடிநீா் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டா் உயிரிழந்தாா். மதுராந்தகம் அருகே அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (56). இவா் அருங்குணம் ஊராட்சியில் ம... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி மற்றும் தசரா திருவிழாவையொட்டி சிறப்புபூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவையொட்டி மாலை நேரங்களில் அம்மன் அலங்காரம் நடைபெறும். மே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: செப். 27-இல் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (செப். 27) விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்-ஆறுபடை வீடு த... மேலும் பார்க்க

ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம்: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்

செங்கல்பட்டு: திருப்போரூா் அருகே ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம் கட்டுவதற்காக காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். திருப்போரூா் பேரூராட்சி, காலவாக்கம் கிராமத்தில்,... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி

மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளி வளாகத்தில் நவராத்திரியை முன்னிட்டு, திங்கள்கிழமை கொலு கண்காட்சி தொடங்கியது. பள்ளித் தாளாளா் டி.லோகராஜ் தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்கு... மேலும் பார்க்க