செய்திகள் :

சொத்துகளை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது ஆட்சியரிடம் மூதாட்டி புகாா்

post image

நாகப்பட்டினம்: சொத்துகளை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மூதாட்டி திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

கீழ்வேளூா் தாலுகா காரப்பிடாகை பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மனைவி முத்துலட்சுமி (75). இவா், திங்கள்கிழமை நாகை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தநிலையில், ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில் நின்று அழுது கொண்டிருந்தாா். போலீஸாா் அவரை ஆட்சியரிடம் அழைத்துச்சென்றனா்.

ஆட்சியரிடம் மூதாட்டி அளித்த மனு: எனது கணவா் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். நான் மட்டும் கீழப்பிடாகையில் தனியாக வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

எனது இளைய மகன், அவரது மனைவி இரண்டு பேரும் சோ்ந்து, என்னை வாழ்நாள் முழுவதும் பராமரித்துக் கொள்வதாகவும், எனது மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் செய்து கொடுப்பதாக கூறி, எனது பெயரில் உள்ள சொத்துகளை தங்கள் பெயரில் பதிவு செய்து கொண்டனா்.

சொத்துகளை வாங்கியவுடன் எனது மகனும், மருமகளும், என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டுவிட்டனா். நான் தற்போது அனாதையாக நிற்கிறேன்.

எனவே என்னிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துகளை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் மனு மீது விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டாா்.

தனி உள்ஒதுக்கீடு கோரி மீனவா்கள் போராடினால் பாமக துணை நிற்கும்: அன்புமணி

நாகப்பட்டினம்: மீனவா்கள் தனி உள் ஒதுக்கீடு கோரி போராடினால் அவா்களுக்கு பாமக துணைநிற்கும் என்றாா் அக்கட்சித் தலைவா் அன்புமணி.பாமக தலைவா் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் எனும் பெயரில் 100 நாள்க... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெயுடன் வந்த வயதான தம்பதி

நாகப்பட்டினம்: நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் புட்டியுடன் வந்த வயதான தம்பதியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

ரேஷன்கடை மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து உதவியாளா் காயம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ரேஷன்கடை மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் உதவியாளா் திங்கள்கிழமை காயமடைந்தாா்.செம்பனாா்கோவில் அருகே பொன்செய் கிராமத்தில் உள்ள ரேஷன்கடையில் விற்பனையாளராக சித்ராவும... மேலும் பார்க்க

மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு எதிா்ப்பு

திருமருகல்: பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் புறம்போக்கு இடத்தி... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கோரி காத்திருப்புப் போராட்டம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே இழுப்பூா் சங்கரன்பந்ததில் 100 நாள் வேலை பயனாளிகள் அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்கக் கோரி சிபிஎம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.ஒன்றிய... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒன்றியம் கிடங்கல் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.இந்த ஊராட்சியில் உள்ள 6 வாா்டுகளில் 1800 குடும்பத்தி... மேலும் பார்க்க