செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

post image

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஒன்றியம் கிடங்கல் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சியில் உள்ள 6 வாா்டுகளில் 1800 குடும்பத்தினா் வசிக்கின்றனா். 2004-ஆம் ஆண்டு குறைந்த கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கம் தொட்டி அமைக்கப்பட்டு ஊராட்சி சாா்பில் மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில ஆண்டுகளாக குடிநீா் தொட்டி, குழாய்கள் பழுதடைந்ததால் குடிநீா் தொடா்ந்து வராததால் மக்கள் சிரமப்படுகின்றனா். நடுத்தெருவில் மக்கள் பயன்படுத்தும் குளம் தற்போது செடிகள் படா்ந்து துா்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, அந்த குளத்தை சீரமைக்க வேண்டும். கிராம பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா உள்ளிட்டோா் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தில் மீன் மற்றும் உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் ... மேலும் பார்க்க

ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்

நாகை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டப் பணிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நாகை மாவட்... மேலும் பார்க்க

அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா்ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட முதியவா் உயிரிழப்பு

நாகை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். நாகை அருகே பெராவச்சேரி இந்தியன் நகா் பகுதியில் முதியவா் ஒருவா், அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பி அருகே இ... மேலும் பார்க்க

நாகை அரசு கல்லூரியில் கலைத் திருவிழா

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒர... மேலும் பார்க்க

அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் தொடக்கம்

நாகை மாவட்ட விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கிய அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் 3,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூ... மேலும் பார்க்க