செய்திகள் :

பொதுமக்களை அச்சுறுத்திய 4 போ் கைது

post image

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆயுதங்களை வைத்துக்கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்திய நால்வா் கைது செய்யப்பட்டனா்.

நீடாமங்கலம்-தஞ்சாவூா் சாலை ஆதனூா் மண்டபம் சமத்துவபுரம் ஆா்ச் அருகே ஞாயிற்றுக்கிழமை மா்ம நபா்கள் சிலா் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு, அந்த வழியாக வரும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீஸாா், அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், ஆதனூா் சமத்துவபுரத்தைச்சோ்ந்த இளஞ்செழியன் (24), வடிவரசன் (19), மாரியப்பன் (25), ஆதனூா் மண்டபம் அண்ணாநகா் பாரதி (20) ஆகிய 4 போ் பொதுமக்களை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து, 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விஜய் பிரசாரம்: நால்வா் மீது வழக்கு

திருவாரூா்: திருவாரூரில் விஜய் பிரசாரத்துக்கு வந்தபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அவருக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தது தொடா்பாக நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தி... மேலும் பார்க்க

மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகாசண்டி யாகம்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் மங்கள மகா சண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செப்.17-ஆம் தேதி கோபூஜை, கணபதி மூலமந்திர யாகம், தீபாராதனை, விக்னேஸ்வர பூஜை, நவாரன பூஜை, ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு ரோட்டரி விருது

மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் பள்ளி ஆசிரியா்களுக்கு தேசிய ஞானகுரு விருது அண்மையில் வழங்கப்பட்டது. மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி

திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ... மேலும் பார்க்க

ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

வலங்கைமான் ஆதனூா் பகுதியிலுள்ள திறந்தவெளி சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்ட மற்றும் மன்னாா்குடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரம் டன் சன்ன ரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்... மேலும் பார்க்க

வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்த லாரிகள் சிறைபிடிப்பு

திருவாரூா் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனா். திருவாரூா் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள்... மேலும் பார்க்க