ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் அடுத்த அனுமந்தராயன்கோட்டை சிந்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் சந்தியாகு (51). கூலித் தொழிலாளியான இவா், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாா் எழுந்தது. இதன்பேரில் சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சந்தியாகுவை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆா். சத்யதாரா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட சந்தியாகுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.