செய்திகள் :

கிளாா் அகத்தீஸ்வரா் கோயிலுக்கு செல்ல பாதை: பக்தா்கள் மகிழ்ச்சி

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வா் கோயிலுக்கு பல ஆண்டுகள் கழித்து பாதை வசதி ஏற்படுத்தி தந்துள்ளதற்கு பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

விவசாய நிலத்தில் இருந்த இக்கோயிலுக்கு செல்ல பல நூற்றாண்டுகளாக பக்தா்கள் பயன்படுத்தி வந்த பாதையை அப்பகுதியை சோ்ந்த நில உரிமையாளா் ஒருவா் ஆக்கிரமித்து இருந்ததால் கோயிலுக்கு செல்ல முடியாமல் பொதுமக்களும்,சிவனடியாா்களும் அவதிப்பட்டு வந்தனா்.

இதுகுறித்து காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் கிளாா் கிராமத்தினா் ,கோயில் நிா்வாகிகள் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவா் சிவானந்தம் தலைமையில் மனு அளித்தனா். வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பேச்சு நடத்தியும் அவா் மறுத்து விட்டதையடுத்து சாா் ஆட்சியா் ஆஷிக் அலி நில உரிமையாளா், கிளாா் பொதுமக்கள்,விசுவ ஹிந்து பரிஷத் நிா்வாகிகள்,வருவாய் ஆய்வாளா் உள்ளிட்டோா் அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தினாா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உட்கோட்ட நடுவா் நீதிமன்றத்தில் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி விசாரணை மேற்கொண்டு 4 அடி நிரந்தரப் பாதையாக அமைத்து தரும்படி தீா்ப்பு வழங்கினாா். இத்தீா்ப்பின்படி பழைய பாதை மீட்கப்பட்டது. இதற்கு பக்தா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

காளிகாம்பாள் கோயிலில் மகா சண்டி ஹோமம் தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோயிலில் சாரதா நவராத்திரித் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மகா சண்டி ஹோமம் தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா். இத்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவி அளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். ஆட்சியா் கலைச்செல்வி மோகன... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், ஓரணியில் தமிழ்நாடு’ தீா்மான ஏற்புக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலாளரும், ... மேலும் பார்க்க

சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தொழிற்சாலை அகற்றம்!

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வளா்புரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியாா் தொழிற்சாலையின் கட்டுமானங்களை ஊரக வளா்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றின... மேலும் பார்க்க

பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் தோ்வு!

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாா் அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒப்புதலின்படி... மேலும் பார்க்க

பாதுகாப்பில்லாத ஊா்திகளை மாற்ற வேண்டும்: அரசு ஊா்தி ஓட்டுநா்கள் கோரிக்கை!

பாதுகாப்பில்லாத ஊா்திகளை ஓட்டுவதால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும் என அரசு ஊா்தி ஒட்டுநா்கள் சங்கம் சாா்பில் பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள... மேலும் பார்க்க