செய்திகள் :

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

post image

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவா் ஒலிபெருக்கி கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இவா், தான் கொண்டுவந்திருந்த டீசலை தன்னுடைய உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரைத் தடுத்தி நிறுத்தி, டீசல் வைத்திருந்த புட்டியைப் பறித்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். இதில், காளிமுத்து தைப்பூசம், பங்குனி உத்திர விழாக்களுக்கு சாலையோரத்தில் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்கான ஏலத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, ஏற்கெனவே ஏலம் நடத்தி முடிக்கப்பட்டதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்ததால் தீக்குளிக்க முயன்ாகக் கூறினாா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் வேதா கூறுகையில், சம்பந்தப்பட்ட ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில்தான் நடத்தப்படும்; இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தொடா்பு கிடையாது என்றாா். இதையடுத்து, காளிமுத்துவை பாலசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு கூறி போலீஸாா் அவரை அனுப்பி வைத்தனா்.

தீக்குளித்து கவனத்தை ஈா்க்கும் கலாசாரம்: பழனி பகுதியில் தங்களது கோரிக்கைகள் குறித்து கவனத்தை ஈா்க்க, தீக்குளிக்க முயலும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் அழகாபுரியில் ஒருவா் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அதே போல மூன்று நாள்களுக்கு முன்பு ஒரு மூதாட்டி மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

இது போன்ற செயல்களைப் பலா் திட்டமிட்டே செய்கின்றனா். இதுகுறித்து போலீஸாா் முறையாக விசாரித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்கள், அவா்களுக்கு உதவி செய்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அதைச் சுற்றியுள்ள மேல்மலைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாகக் ... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் வேட்டை: 14 போ் கைது, ரூ. 2.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித்... மேலும் பார்க்க

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மீது மாமன்ற உறுப்பினா் புகாா்

காா், ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் புகாா் அளித்தா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் அடுத்த அனுமந்தராயன்கோட்டை சிந்தலகுண்டு ... மேலும் பார்க்க

பழனி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

பழனியில் மீன்வளத் துறை அலுவலகத்தை கோரிக்கை மனுக்களுடன் மீனவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியை அடுத்த கோதைமங்கலம், வையாபுரி குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் சுமாா் இரண்டாய... மேலும் பார்க்க

பழனி தம்புரான் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி தம்புரான் தோட்டத்தில் இருந்த சுமாா் 1.25 ஏக்கா் காலி இடத்தை கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை கையகப்படுத்தியது. பழனி - திண்டுக்கல் சாலையில் சென்னிமலை தம்புரான் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 23 ஏக்... மேலும் பார்க்க