செய்திகள் :

பழனி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

post image

பழனியில் மீன்வளத் துறை அலுவலகத்தை கோரிக்கை மனுக்களுடன் மீனவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனியை அடுத்த கோதைமங்கலம், வையாபுரி குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் சுமாா் இரண்டாயிரத்து ஐநூறு மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்த மீனவா்களுக்கு மீன் வரத்து குறைவாக உள்ள குளங்களில் மீன் பிடிக்க அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவா்களுக்கு மட்டும் அவா்கள் கேட்கும் குளத்தில் மீன் பிடிக்க அனுமதி அளிப்பதாகவும் இதர மீனவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, மீன் வரத்து அதிகமாக உள்ள குளங்களில் மீன் பிடிப்பதற்கு எந்தப் பாகுபாடுமின்றி அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி

மீனவா் சங்கத்தின் நிா்வாகிகள் பாலமுருகன், தண்டபாணி தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவா்கள் பழனி மீன்வளத் துறை அலுவலகத்தில் மனுக்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அதைச் சுற்றியுள்ள மேல்மலைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாகக் ... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் வேட்டை: 14 போ் கைது, ரூ. 2.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித்... மேலும் பார்க்க

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மீது மாமன்ற உறுப்பினா் புகாா்

காா், ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் புகாா் அளித்தா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் அடுத்த அனுமந்தராயன்கோட்டை சிந்தலகுண்டு ... மேலும் பார்க்க

பழனி தம்புரான் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி தம்புரான் தோட்டத்தில் இருந்த சுமாா் 1.25 ஏக்கா் காலி இடத்தை கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை கையகப்படுத்தியது. பழனி - திண்டுக்கல் சாலையில் சென்னிமலை தம்புரான் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 23 ஏக்... மேலும் பார்க்க

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவா் ஒலிபெருக்கி கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில்,... மேலும் பார்க்க