திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா சிறப்பு பூஜைகளுடன் திங்கள்கிழமை தொடங்கியது.
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை அக். 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக ஒன்பது நாள்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. திங்கள்கிழமை (செப்.22) தொடங்கி அக்.1-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது. இதையொட்டி, பெரும்பாலான அம்மன் கோயில்களில் நவராத்திரி கொலு வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொள்வா்.
நாமக்கல் செல்லப்பப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோயிலில், நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் தினந்தோறும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், நாமக்கல் நரசிம்மா் கோயிலில், உற்சவமூா்த்தி திங்கள்கிழமை மச்சாவதாரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை கூா்மஅவதாரம், புதன் வாமனஅவதாரம், வியாழக்கிழமை ரங்கமன்னாா் திருக்கோலம், வெள்ளி ராமவதாரம், சனி கிருஷ்ணாவதாரம், ஞாயிற்றுக்கிழமை பரமபதநாதா் அலங்காரம், திங்கள்கிழமை மோகனஅவதாரம், செவ்வாய்க்கிழமை ராஜாங்கசேவை, புதன்கிழமை நாமக்கல் குளக்கரையில் அரங்கநாத சுவாமியும், நரசிம்ம சுவாமியும் எழுந்தருளி அம்புவிடுதல், வியாழக்கிழமை (அக். 2) விசேஷ திருக்கோலம் நடைபெறுகிறது.
இதையொட்டி ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி பாடல்கள் இசைத்தல், பஜனை பாடுதல், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. கோயில்கள் மட்டுமின்றி பெரும்பாலான வீடுகளிலும் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.