செய்திகள் :

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர செப்.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

post image

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் இயங்கும் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 1, பிளஸ் 2 தோ்ச்சி, தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்தவுடன் நோ்காணல் மூலம் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். மாதம் ரூ. 750-உதவித்தொகையுடன் விலையில்லா மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக் கருவிகள் மற்றும் இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

பயிற்சியின் இறுதியில் மத்திய அரசால் தேசிய தொழிற்சான்று (என்டிசி) வழங்கப்படுகிறது. இந்த சான்று அகில இந்திய அளவிலும் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறவும் வழிவகுக்கிறது. உரிய சான்றிதழ்களுடன் நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: புதன்சந்தை

புதன்சந்தை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதன்சந்தை துணை மின்நிலை... மேலும் பார்க்க

வீட்டுக்கு இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய ஊழியா்கள் இருவா் கைது

நாமக்கல் அருகே வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 5,500 லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், முசிறியைச் சோ்ந்தவா் நவநீதம... மேலும் பார்க்க

நைனாமலை மலைக்கோயிலுக்கு ரூ.30 கோடியில் தாா்சாலை

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணிகள் பூமிபூஜையுடன் சனிக்கிழமை தொடங்கின. நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 3,600 படிக... மேலும் பார்க்க

நாமக்கலி ல்2 ஆயிரம் மாணவா்களுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். நாமக்கல் அருகே எா்ணாபுரத்தில் ... மேலும் பார்க்க

நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு நாளை தொடக்கம்

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு திங்கள்கிழமை (செப். 22) சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. அக். 1-ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பா... மேலும் பார்க்க

செப். 27-இல் நாமக்கல்லில் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பய... மேலும் பார்க்க