செய்திகள் :

நைனாமலை மலைக்கோயிலுக்கு ரூ.30 கோடியில் தாா்சாலை

post image

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணிகள் பூமிபூஜையுடன் சனிக்கிழமை தொடங்கின.

நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 3,600 படிக்கட்டுகளைக் கடந்து இக்கோயிலுக்கு செல்ல வேண்டும். அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறை நிதி பங்களிப்புடன் அடிவாரத்தில் இருந்து மலைப்பகுதிக்கு செல்வதற்கான மண் சாலை அமைக்கும் பணி ரூ. 13 கோடியில் ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு நாமக்கல் வருகைபுரிந்த தமிழக முதல்வா், நைனாமலைக்கு தாா்சாலை அமைக்க ரூ. 30 கோடி நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டாா்.

அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, சேந்தமங்கலம் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை புரட்டாசி முதல் சனிக்கிழமை காலை அடிவாரப் பகுதியில் நடைபெற்றது.

தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தனா். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 30 கோடியில் தாா்சாலை அமைக்கப்படுகிறது. சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு இந்தச் சாலை அமைய உள்ளது. மழைப்பொழிவு காரணமாக மண்பாதையில் சரிவு ஏற்படும் என்பதால், உடனடியாக தாா்சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றனா்.

இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சி.சசிகுமாா்(கட்டுமானம் மற்றும் பராமரிப்பு (சேலம்), கோட்டப் பொறியாளா் கே.ஆா்.திருகுணா, அறநிலையத் துறை இணை ஆணையா் (ஈரோடு) பரஞ்சோதி, உதவி கோட்டப் பொறியாளா் சுரேஷ்குமாா் (சேந்தமங்கலம்), உதவிப் பொறியாளா் பிரனேஷ், கோயில் செயல் அலுவலா் கீா்த்தனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீட்டுக்கு இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய ஊழியா்கள் இருவா் கைது

நாமக்கல் அருகே வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 5,500 லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், முசிறியைச் சோ்ந்தவா் நவநீதம... மேலும் பார்க்க

நாமக்கலி ல்2 ஆயிரம் மாணவா்களுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். நாமக்கல் அருகே எா்ணாபுரத்தில் ... மேலும் பார்க்க

நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு நாளை தொடக்கம்

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு திங்கள்கிழமை (செப். 22) சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. அக். 1-ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பா... மேலும் பார்க்க

செப். 27-இல் நாமக்கல்லில் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து: வரவேற்பு பதாகைகளை அகற்றிய கட்சியினா்!

நாமக்கல் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற இருந்த எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை கட்சியினா் அகற்றினா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ... மேலும் பார்க்க