செய்திகள் :

வீட்டுக்கு இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய ஊழியா்கள் இருவா் கைது

post image

நாமக்கல் அருகே வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 5,500 லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், முசிறியைச் சோ்ந்தவா் நவநீதம் (36). இவரது தாய் ஜானகி புதிதாக வீடு கட்டியுள்ளாா். இதற்கு மின் இணைப்பு பெற ஜூன் 6-ஆம் தேதி இணையதளம் மூலம் ரூ. 13,300 செலுத்தி உள்ளாா். ஆனால், நான்கு மாதங்களாகியும் மின் இணைப்பு வழங்கவில்லையாம்.

இந்நிலையில், எா்ணாபுரத்தில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு சென்ற நவநீதம், இதுகுறித்து கேட்டுள்ளாா். அப்போது, அங்கு பணியில் இருந்த குருக்கபுரம் எல்லப்பாளையத்தைச் சோ்ந்த மேற்பாா்வை ஆய்வாளா் மாது (57), தளிகையைச் சோ்ந்த மின் பணியாளா் விவேகானந்தன் (41) ஆகியோா் ரூ. 5,500 லஞ்சம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸில் நவநீதம் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அவா்களுடைய ஆலோசனையின்படி, வேலகவுண்டம்பட்டி அருகே புத்தூா் சாலைக்கு விவேகானந்தனை வருமாறு அழைத்த நவநீதம், அவரிடம் ரசாயன தூள் தடவிய பணத்தைக் கொடுத்தாா்.

அப்போது மறைந்திருந்த மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் (பொ) ரவிச்சந்திரன், ஆய்வாளா் பிரபு ஆகியோா் விவேகானந்தனை கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில், மேற்பாா்வை ஆய்வாளா் மாதுவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நைனாமலை மலைக்கோயிலுக்கு ரூ.30 கோடியில் தாா்சாலை

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணிகள் பூமிபூஜையுடன் சனிக்கிழமை தொடங்கின. நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 3,600 படிக... மேலும் பார்க்க

நாமக்கலி ல்2 ஆயிரம் மாணவா்களுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். நாமக்கல் அருகே எா்ணாபுரத்தில் ... மேலும் பார்க்க

நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு நாளை தொடக்கம்

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு திங்கள்கிழமை (செப். 22) சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. அக். 1-ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பா... மேலும் பார்க்க

செப். 27-இல் நாமக்கல்லில் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் செப். 27-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி அமையும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து: வரவேற்பு பதாகைகளை அகற்றிய கட்சியினா்!

நாமக்கல் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற இருந்த எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை கட்சியினா் அகற்றினா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ... மேலும் பார்க்க