செய்திகள் :

பழனி தம்புரான் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

post image

பழனி தம்புரான் தோட்டத்தில் இருந்த சுமாா் 1.25 ஏக்கா் காலி இடத்தை கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை கையகப்படுத்தியது.

பழனி - திண்டுக்கல் சாலையில் சென்னிமலை தம்புரான் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 23 ஏக்கா் நிலம் உள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த இடத்தின் மதிப்பு சுமாா் ஆயிரம் கோடியாகும். இந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட வாடகைதாரா்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கடை நடத்தி வருகிறாா்கள்.

கடந்த பல ஆண்டுகளாக அறக்கட்டளையைப் பராமரித்து வரும் நிா்வாகியிடம் வாடகை செலுத்தி வந்த நிலையில், இந்த இடத்துக்கு அறக்கட்டளை தக்காராக பழனி கோயில் இணை ஆணையரை நீதிமன்றம் நியமித்து ஆணை பிறப்பித்தது.

இதையடுத்து, பழனி கோயில் நிா்வாகம் இங்குள்ள கடைகளைக் கணக்கிட்டு, வாடகையைக் கோயில் அலுவலகத்தில் செலுத்துமாறு தெரிவித்தது. இந்த இடத்தில் நீதிமன்றம், பெரிய தனியாா் பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளன. சுமாா் ஐந்து ஏக்கா் பரப்பளவிலான பள்ளிகள் மாதம் வெறும் ஆயிரம் ரூபாயை மட்டுமே வாடகையாகச் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இங்கு காலியாக உள்ள இடங்களை கோயில் நிா்வாகம் கையகப்படுத்தும் பணியை திங்கள்கிழமை மேற்கொண்டது. கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள், முதல் கட்டமாக இங்குள்ள 1.25 ஏக்கா் காலி நிலத்தைச் சுத்தப்படுத்தி வேலியிட்டனா்.

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அதைச் சுற்றியுள்ள மேல்மலைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாகக் ... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் வேட்டை: 14 போ் கைது, ரூ. 2.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித்... மேலும் பார்க்க

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மீது மாமன்ற உறுப்பினா் புகாா்

காா், ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் புகாா் அளித்தா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் அடுத்த அனுமந்தராயன்கோட்டை சிந்தலகுண்டு ... மேலும் பார்க்க

பழனி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

பழனியில் மீன்வளத் துறை அலுவலகத்தை கோரிக்கை மனுக்களுடன் மீனவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியை அடுத்த கோதைமங்கலம், வையாபுரி குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் சுமாா் இரண்டாய... மேலும் பார்க்க

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவா் ஒலிபெருக்கி கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில்,... மேலும் பார்க்க