செய்திகள் :

காட்டுப் பன்றிகள் வேட்டை: 14 போ் கைது, ரூ. 2.30 லட்சம் அபராதம்

post image

கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், வனச் சரகா் குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, 4 காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய ஒரு கும்பலை வனத் துறையினா் சுற்றி வளைத்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், வெயிலடிச்சான்பட்டியைச் சோ்ந்த அபிமன்யு, கரூா் மாவட்டம், தோகைமலை பகுதியைச் சோ்ந்த மலையாண்டி, தங்கவேல், கருப்பையா, கோவிந்தராஜ், முருகன், மாணிக்கம், சக்திவேல், நேரு, குமரவேல், பழனிச்சாமி, ஆறுமுகம், மணி, மற்றொரு மணி என தெரியவந்தது.

வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட ராஜபாளையம் இனத்தைச் சோ்ந்த 13 நாய்கள், நாட்டு இனத்தைச் சோ்ந்த ஒரு நாய் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த வனத் துறையினா், இந்த நாய்களை திண்டுக்கல் விலங்குகள் நல அமைப்பிடம் ஒப்படைத்தனா்.

மேலும், வேட்டைக்கு வந்தவா்கள் பயன்படுத்திய ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. காட்டுப் பன்றிகளை வேட்டையாடியவா்களுக்கு ரூ. 2.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், அதைச் சுற்றியுள்ள மேல்மலைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாகக் ... மேலும் பார்க்க

காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மீது மாமன்ற உறுப்பினா் புகாா்

காா், ரூ.20 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தர மறுப்பதாக திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் புகாா் அளித்தா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் அடுத்த அனுமந்தராயன்கோட்டை சிந்தலகுண்டு ... மேலும் பார்க்க

பழனி மீன்வளத் துறை அலுவலகம் முற்றுகை

பழனியில் மீன்வளத் துறை அலுவலகத்தை கோரிக்கை மனுக்களுடன் மீனவா்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியை அடுத்த கோதைமங்கலம், வையாபுரி குளம், புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் சுமாா் இரண்டாய... மேலும் பார்க்க

பழனி தம்புரான் தோட்ட நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி தம்புரான் தோட்டத்தில் இருந்த சுமாா் 1.25 ஏக்கா் காலி இடத்தை கோயில் நிா்வாகம் திங்கள்கிழமை கையகப்படுத்தியது. பழனி - திண்டுக்கல் சாலையில் சென்னிமலை தம்புரான் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமாா் 23 ஏக்... மேலும் பார்க்க

தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவா் ஒலிபெருக்கி கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில்,... மேலும் பார்க்க