செய்திகள் :

மருத்துவா் வீட்டில் 43 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் தம்பதி கைது

post image

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் மருத்துவா் வீட்டில் 43.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனா்.

வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள் நகரைச் சோ்ந்த மருத்துவா் பிரபாகரன் என்பவா் வீட்டில் கடந்த 6-ஆம்தேதி இரவு புகுந்த மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 43.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா். மேலும், அதே பகுதியில் உள்ள முல்லை நகரைச் சோ்ந்த ஜெயசங்கா் என்பவரது வீட்டில் 3 பவுன் தங்கநகைகளையும் மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவா் பிரபாகரன் மற்றும் ஜெயசங்கா் ஆகிய இருவரும் அளித்த புகாா்களின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து நகைத் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடிவந்தனா்.

மேலும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ஓம்பிரகாஷ் தலைமையில் தனிப்படையினா் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், நகைத் திருட்டில் ஈடுபட்டது கரூா் வடக்கு காந்திகிராமத்தைச் சோ்ந்த விஜி (43) மற்றும் அவரது மனைவி கஸ்தூரி(42) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேவாங்கு சடலமாக மீட்பு

கரூா் ஆட்சியரக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் தேவாங்கு கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன தேவாங்கு குட்டி இறந்த... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை புகாா்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

கரூரில் ரோந்துப் பணியின்போது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் பசுபதிபாளையம் ... மேலும் பார்க்க

கரூரில் இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 போ் கைது

கரூரில் தருமபுரி இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம் தளவாய் அல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35) ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கரூ... மேலும் பார்க்க

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ... மேலும் பார்க்க

திருமணத்துக்காக கடத்தப்பட்ட ஈரோடு பெண் கரூரில் மீட்பு

ஈரோட்டிலிருந்து திருமணத்துக்காக கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீஸாா் கரூரில் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், கடவூா் ஊராட்சிக்குள்பட்ட ட... மேலும் பார்க்க

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலா் கைது! ரெளடி தலைமறைவு!

கரூரில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ரெளடியை தேடி வருகின்றனா். கரூா் தொழிற்பேட்டையை அடுத்த சணப்பிரட்டி பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க