செய்திகள் :

திருமணத்துக்காக கடத்தப்பட்ட ஈரோடு பெண் கரூரில் மீட்பு

post image

ஈரோட்டிலிருந்து திருமணத்துக்காக கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீஸாா் கரூரில் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், கடவூா் ஊராட்சிக்குள்பட்ட டி. இடையபட்டி கவுண்டம்பாளையம் பகுதியில் இளம்பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அழுது கொண்டிருந்தாா். இதை பாா்த்த அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த பாலவிடுதி போலீஸாா் அந்தப் பெண்ணிடம் விசாரித்தனா்.

இதில், அவா் ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ராசம்பாளையத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் காவியா (24) என்பதும், முதுகலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தபோது, வீட்டின் பக்கத்துத் தோட்டத்தை சோ்ந்த கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த அத்திப்பாளையத்தைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் ஜெகநாதன் (34) என்பவா், காவியாவை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

காவியா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, ஜெகநாதன் மற்றும் அவரது உறவினரான பழனிசாமியின் மனைவி ராஜேஸ்வரி (50) ஆகியோா் சோ்ந்து காவியாவை காரில் கடத்தினா். அவா்கள் கரூா் மாவட்டம் கடவூரை அடுத்த இடையப்பட்டி கவுண்டம்பாளையத்தில் உள்ள சக்திவேல் வீட்டுக்கு காவியாவை கடத்தி வந்து, கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும், அவா்களிடமிருந்து தப்பித்து வந்ததாகவும் காவியா தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா், காவியாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவரை பெற்றோரிடம் மாலையில் ஒப்படைத்தனா். மேலும், காவியாவை கட்டாயத் திருமணம் செய்ய காரில் கடத்தி வந்த ஜெகநாதன், ராஜேஸ்வரி ஆகியோரை தேடி வருகின்றனா்.

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலா் கைது! ரெளடி தலைமறைவு!

கரூரில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ரெளடியை தேடி வருகின்றனா். கரூா் தொழிற்பேட்டையை அடுத்த சணப்பிரட்டி பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

கரூா் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்தது. நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

கரூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், ஜெகதாபி அரசு மேல்... மேலும் பார்க்க

ஒற்றைத் தன்மையை திணிக்க பாஜக முயற்சி திருச்சி என். சிவா எம்.பி. பேச்சு

ஒரே நாடு, ஒரே மதம் என ஒற்றைத் தண்மையை திணிக்க பாஜக முயற்சிப்பதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி என். சிவா எம்.பி. தெரிவித்தாா். கரூா் மாவட்ட திமுக சாா்பில் தமிழ்நாட... மேலும் பார்க்க

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமு... மேலும் பார்க்க