புரட்டாசி மாத மஹாளய அமாவாசை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா். பின்னா் பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில், சேமங்கி மாரியம்மன் கோயில், புன்னம் மாரியம்மன் கோயில், பேரூரம்மன்கோயில், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.