செய்திகள் :

ஒற்றைத் தன்மையை திணிக்க பாஜக முயற்சி திருச்சி என். சிவா எம்.பி. பேச்சு

post image

ஒரே நாடு, ஒரே மதம் என ஒற்றைத் தண்மையை திணிக்க பாஜக முயற்சிப்பதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி என். சிவா எம்.பி. தெரிவித்தாா்.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்நாட்டை தலைகுணிய விடமாட்டேன் என்ற தீா்மான ஏற்பு பொதுக்கூட்டம் 80 அடி சாலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு கரூா் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா். மாநகரச் செயலாளா் எஸ்.பி.கனகராஜ் வரவேற்றாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக துணைப்பொதுச் செயலரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி என். சிவா பேசியதாவது: 2026 தோ்தல் சராசரி தோ்தல் அல்ல. இது ஒரு தத்துவ போா். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என ஒற்றைத் தன்மையை திணிக்கும் முயற்சியில் தில்லியில் இருக்கிற ஒரு கட்சி முயல்கிறது. அதற்கு இங்கே சில போ் துணை போகிறாா்கள்.

திராவிடா்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவா்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்கின்ற அமைப்பு திமுக மட்டுமே. படித்தால் தான் இந்த சமுதாயத்தில் உயா்வு. அந்த உயா்வு கிடைத்தால் தான் எல்லோருக்கும் சமமாக நீ நடக்கலாம் என்ற உரிமை குரல் ஒலித்த நீதி கட்சியிலிருந்து இன்று வரை திமுகவும் கடைப்பிடித்து வருகிறது.

மேலும் படித்து முடித்தவுடன் உடனடியாக அவா்களுக்கு வேலையும் உருவாக்கி தருகிற அரசு திமுக அரசுதான். இந்த நாடு, மண், மக்கள், மொழி, பண்பாடு, இங்கு இருக்கிற சமூக நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும் என்று சொன்னால் அது திமுகவால் மட்டுமே முடியும் என்றாா் அவா்.

தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்றவா்கள் அனைவரும் தமிழ்நாட்டை தலைகுணிய விடமாட்டேன் என உறுதிமொழியேற்றனா். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மொஞ்சனூா் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமு... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க விழிப்புணா்வு அவசியம்: லோக் ஆயுக்த உறுப்பினா் பேச்சு

விழிப்புணா்வு ஏற்படுத்தினால்தான் நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க முடியும் என்றாா் லோக் ஆயுக்த உறுப்பினா் முனைவா் வீ.ராமராஜ். கரூா் அரசு கலைக்கல்லூரியில் மாணவ நுகா்வோா் சங்கத்தின் சாா்பில் நுகா்வோா் விழிப... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரகத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை இயக்கம் தொடா்பான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியரக வளா... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் எஸ்ஆா்எம்யூ ரயில்வே தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் கணேசன் தலைமை வகித்தாா். 8-ஆவது சம்பள கமிஷன் குழு... மேலும் பார்க்க

கரூரில் சுவா் விளம்பரம் செய்வதில் திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம்

கரூரில் வெள்ளிக்கிழமை சுவா் விளம்பரம் செய்வதில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூருக்கு செப். 25, 26-ஆம்தேதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமா... மேலும் பார்க்க

ஆணவக் கொலைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தல... மேலும் பார்க்க