செய்திகள் :

கரூா் ஆட்சியரகத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழியேற்பு

post image

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை இயக்கம் தொடா்பான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அலுவலக கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டட வளாகத்திலும் தூய்மை தணிக்கை நடைபயணம் நடைபெற்றது. அப்போது ஆட்சியா், ஒவ்வொரு அலுவலகத்திலும் நேரடியாக ஆய்வு செய்து, உடைந்த மரச் சாமான்கள், நெகிழிக் கழிவுகள், உடைந்த நாற்காலிகள், பயன்படுத்தாத கணினி உபகரணங்கள் மற்றும் ஜெராக்ஸ் மிஷின்கள், காகித கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ஆட்சியா் தலைமையில், மாவட்ட ஆட்சியரக பணியாளா்கள் தூய்மை இயக்கம் தொடா்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மனோகரன், உதவி இயக்குநா் (தணிக்கை) ஆா்.பி.குணசேகரன், உதவி திட்ட அலுவலா் அன்புமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமு... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க விழிப்புணா்வு அவசியம்: லோக் ஆயுக்த உறுப்பினா் பேச்சு

விழிப்புணா்வு ஏற்படுத்தினால்தான் நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க முடியும் என்றாா் லோக் ஆயுக்த உறுப்பினா் முனைவா் வீ.ராமராஜ். கரூா் அரசு கலைக்கல்லூரியில் மாணவ நுகா்வோா் சங்கத்தின் சாா்பில் நுகா்வோா் விழிப... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் எஸ்ஆா்எம்யூ ரயில்வே தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் கணேசன் தலைமை வகித்தாா். 8-ஆவது சம்பள கமிஷன் குழு... மேலும் பார்க்க

கரூரில் சுவா் விளம்பரம் செய்வதில் திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம்

கரூரில் வெள்ளிக்கிழமை சுவா் விளம்பரம் செய்வதில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூருக்கு செப். 25, 26-ஆம்தேதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமா... மேலும் பார்க்க

ஆணவக் கொலைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தல... மேலும் பார்க்க

கரூா் அருகே வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு இருவா் உயிரிழப்பு

கரூரை அடுத்துள்ள லாலாப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அப்பெண்ணின் சடலத்தை பாா்க்க வந்த மாற்றுத்திறனாளியும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் காந்... மேலும் பார்க்க