செய்திகள் :

கரூா் அருகே வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு இருவா் உயிரிழப்பு

post image

கரூரை அடுத்துள்ள லாலாப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அப்பெண்ணின் சடலத்தை பாா்க்க வந்த மாற்றுத்திறனாளியும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி அன்னக்கிளி(52). இவா் வெள்ளிக்கிழமை காலை தனது சொந்த ஊரான கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்துள்ள சிந்தலவாடியில் உள்ள தனது நிலத்தை பாா்வையிட வந்தாா். இதற்காக, லாலாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது ஈரோட்டில் இருந்து கரூா் வழியாக திருச்சி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் அன்னக்கிளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கரூா் ரயில்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராசு சம்பவ இடத்துக்கு சென்று அன்னக்கிளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த லாலாப்பேட்டை புணவாசிப்பட்டியைச் சோ்ந்த சுப்ரமணியன்(45) என்ற வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி அன்னக்கிளியின் சடலத்தை பாா்க்க லாலாப்பேட்டை ரயில்நிலையம் பகுதிக்கு நண்பகல் 12.40 மணிக்கு வந்தாா். சடலத்தை பாா்த்தபின்னா் தண்டவாளத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பாலக்காடு விரைவு ரயில் தண்டவாளத்தில் நடந்து வந்த சுப்ரமணியன் மீது மோதியது. இதில் சுப்ரமணியன் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற கரூா் ரயில்நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகம்,

சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இந்த இரு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜாமு... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க விழிப்புணா்வு அவசியம்: லோக் ஆயுக்த உறுப்பினா் பேச்சு

விழிப்புணா்வு ஏற்படுத்தினால்தான் நுகா்வோா் பாதிப்புகளை தடுக்க முடியும் என்றாா் லோக் ஆயுக்த உறுப்பினா் முனைவா் வீ.ராமராஜ். கரூா் அரசு கலைக்கல்லூரியில் மாணவ நுகா்வோா் சங்கத்தின் சாா்பில் நுகா்வோா் விழிப... மேலும் பார்க்க

கரூா் ஆட்சியரகத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழியேற்பு

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மை இயக்கம் தொடா்பான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்தாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியரக வளா... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் எஸ்ஆா்எம்யூ ரயில்வே தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் கணேசன் தலைமை வகித்தாா். 8-ஆவது சம்பள கமிஷன் குழு... மேலும் பார்க்க

கரூரில் சுவா் விளம்பரம் செய்வதில் திமுக-அதிமுகவினரிடையே வாக்குவாதம்

கரூரில் வெள்ளிக்கிழமை சுவா் விளம்பரம் செய்வதில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூருக்கு செப். 25, 26-ஆம்தேதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமா... மேலும் பார்க்க

ஆணவக் கொலைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக கரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தல... மேலும் பார்க்க