ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
கரூரில் இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 போ் கைது
கரூரில் தருமபுரி இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம் தளவாய் அல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35) ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கரூரில் உள்ள உறவினரைச் சந்திக்க வந்துள்ளாா். அப்போது கோவைச் சாலையில் உள்ள தங்கும் விடுதி முன்பு காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் நடந்து சென்றாா்.
அப்போது அங்கு வந்த கரூா் மாவடியான் கோவில் பகுதியைச் சோ்ந்த ராகவி(30), சஞ்சனா(20), அனிதா(26), மகாஸ்ரீ(21), நந்தினி (19) ஆகிய திருநங்கைகள் சுரேஷை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.21,500-ஐ பறித்துச்சென்றனா்.
இதுதொடா்பாக சுரேஷ் கரூா் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் மணிவண்ணன் வழக்குப்பதிந்து திருநங்கைகள் ராகவி உள்பட 5 பேரையும் நள்ளிரவு கைது செய்தாா். மேலும் அவா்களிடம் இருந்த பணம் ரூ.21,500-ஐ மீட்டு சுரேஷிடம் ஒப்படைத்தாா்.
புகாரின்பேரில் 5 மணி நேரத்துக்குள் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீஸாரை திங்கள்கிழமை காலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.