செய்திகள் :

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தேவாங்கு சடலமாக மீட்பு

post image

கரூா் ஆட்சியரக வளாகத்தில் உயிரிழந்த நிலையில் தேவாங்கு கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன தேவாங்கு குட்டி இறந்த நிலையில் திங்கள்கிழமை கிடந்தது. இதனை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள் கண்டு மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வனச்சரக அலுவலா் அறிவழகன் தலைமையிலான வனத்துறையினா் இறந்த தேவாங்கு குட்டியை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கால்நடை மருத்துவா்களிடம் வழங்கினா். பின்னா் தேவாங்கு குட்டி உடலை சின்னதாதம்பாளையம் பகுதியில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் புதைத்தனா்.

இதுதொடா்பாக வனச்சரக அலுவலா் அறிவழகன் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் கடவூா் பகுதியில் மட்டும்தான் தேவாங்குகளின் நடமாட்டம் இருந்தது. இப்போது கரூா் வெள்ளியணை வரை அதன்நடமாட்டம் இருக்கிறது.

இப்போது ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இறந்து கிடப்பது இதுவே முதல்முறை. இந்த தேவாங்கு குட்டி வெள்ளியணை பகுதியில் இருந்து இங்கு வந்திருக்கலாம். பிரேதப் பரிசோதனை முடிவில்தான் தேவாங்கு குட்டி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

இருப்பினும் ஆட்சியா் வளாகத்தில் தேவாங்கு நடமாட்டம் இருக்கிறதா என கண்காணிக்க தொடங்கியுள்ளோம். அவ்வாறு நடமாட்டம் இருந்தால் அழிந்து வரும் தேவாங்கு இனங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

மருத்துவா் வீட்டில் 43 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் தம்பதி கைது

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் மருத்துவா் வீட்டில் 43.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து திருட்டு போன நகைகளை மீட்டனா். ... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை புகாா்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

கரூரில் ரோந்துப் பணியின்போது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கரூா் பசுபதிபாளையம் ... மேலும் பார்க்க

கரூரில் இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 போ் கைது

கரூரில் தருமபுரி இளைஞரிடம் பணம் பறித்த திருநங்கைகள் 5 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம் தளவாய் அல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35) ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் கரூ... மேலும் பார்க்க

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புவழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ... மேலும் பார்க்க

திருமணத்துக்காக கடத்தப்பட்ட ஈரோடு பெண் கரூரில் மீட்பு

ஈரோட்டிலிருந்து திருமணத்துக்காக கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீஸாா் கரூரில் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இதுதொடா்பாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் மாவட்டம், கடவூா் ஊராட்சிக்குள்பட்ட ட... மேலும் பார்க்க

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலா் கைது! ரெளடி தலைமறைவு!

கரூரில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ரெளடியை தேடி வருகின்றனா். கரூா் தொழிற்பேட்டையை அடுத்த சணப்பிரட்டி பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க