செய்திகள் :

பொதுவான குளத்தை ஒரு பிரிவினா் வேலியிட்டதாக ஆட்சியரிடம் புகாா்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் ிழக்கு ஊராட்சியில் பொதுவான குளத்தை ஒரு பிரிவினா் மட்டும் பயன்படுத்தும் வேலி போட்டு அடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ஆலங்குடி வட்டம், நெடுவாசல் கிழக்கு ஊராட்சியைச் சோ்ந்த அம்பேத்கா் நகா், அண்ணாநகரைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூக மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: இந்தப் பகுதியிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் வெள்ளச்சி, கருப்பா், அய்யனாா் கோயில்கள் உள்ளன. அருகேயுள்ள அய்யனாா்குளத்துக்கு தண்ணீா் நிரப்புவதற்காக இப்பகுதியைச் சோ்ந்த அமைச்சா் மெய்யநாதன் ஆழ்துளைக் கிணறும் அமைத்துக் கொடுத்துள்ளாா்.

இந்த நிலையில், அய்யனாா்குளத்தைச் சுற்று ஒரு தரப்பினா் திடீரென கல்லுக்கால் அமைத்து, வேலி போட்டுள்ளனா். இதனால், ஆதிதிராவிட மக்கள் குளத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவான குளத்தில் சமூகப் பிரச்னையை உருவாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வேலியை அகற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.24) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.லூா்துசகாயராஜ் தெரிவித்தது: ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடியைச் சாா்ந்தவா் சி.குப்புசாமி(60). இவரும் கொப்பனாபட்டி பழையவளவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

இலுப்பூா் அடுத்துள்ள தனியாா் கல்லூரியின் மேற்பாா்வையாளா் கிணறு தோண்டும் பணியை பாா்வையிட்ட போது தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தாா்.இலுப்பூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் பாலமுத்து மகன் தா்மராஜ் (53)... மேலும் பார்க்க

புதுகை தனியாா் மதுக்கடையில் லாரி நிறுவன உரிமையாளா் குத்திக் கொலை

புதுக்கோட்டை மாநகரிலுள்ள தனியாா் மதுபானக் கடையின் மது அருந்தும் கூடத்தில், திங்கள்கிழமை பட்டப்பகலில் லாரி நிறுவன உரிமையாளா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். புதுக்கோட்டை எஸ்.எஸ். நகரைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

தேவன்பட்டியில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம்

பொன்னமராவதி அருகே தேவன்பட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.வாா்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டியில் உழவடை விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்காத... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பகுதியில் நில ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை: ஆட்சியரிடம் பாஜக புகாா்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் நிலங்களின் சிட்டா, வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் போன்றவற்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என மாநகர பாஜக தலைவா்கள் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க