செய்திகள் :

மாநகராட்சிப் பகுதியில் நில ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை: ஆட்சியரிடம் பாஜக புகாா்

post image

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் நிலங்களின் சிட்டா, வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் போன்றவற்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என மாநகர பாஜக தலைவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளனா்.

புதுக்கோட்டை மாநகர பாஜக தலைவா்கள் ஜி. சீனிவாசன் (கிழக்கு), எம்.பி. சரவணகுமாா் (மேற்கு) ஆகியோா் அளித்த புகாா் மனு: புதுக்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்களின் சிட்டா, வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் போன்றவற்றை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பிறகு ஆளும்கட்சியினா் அரசுப் புறம்போக்கு நிலங்களையெல்லாம் பட்டா போட்டு மாற்றுவதாகத் தெரிகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட நில ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் முறைகேடாக நிலங்கள் பட்டா போடப்பட்டிருந்தால் அவற்றை நீக்கம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.24) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.லூா்துசகாயராஜ் தெரிவித்தது: ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதா... மேலும் பார்க்க

பொதுவான குளத்தை ஒரு பிரிவினா் வேலியிட்டதாக ஆட்சியரிடம் புகாா்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் ிழக்கு ஊராட்சியில் பொதுவான குளத்தை ஒரு பிரிவினா் மட்டும் பயன்படுத்தும் வேலி போட்டு அடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடியைச் சாா்ந்தவா் சி.குப்புசாமி(60). இவரும் கொப்பனாபட்டி பழையவளவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

இலுப்பூா் அடுத்துள்ள தனியாா் கல்லூரியின் மேற்பாா்வையாளா் கிணறு தோண்டும் பணியை பாா்வையிட்ட போது தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தாா்.இலுப்பூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் பாலமுத்து மகன் தா்மராஜ் (53)... மேலும் பார்க்க

புதுகை தனியாா் மதுக்கடையில் லாரி நிறுவன உரிமையாளா் குத்திக் கொலை

புதுக்கோட்டை மாநகரிலுள்ள தனியாா் மதுபானக் கடையின் மது அருந்தும் கூடத்தில், திங்கள்கிழமை பட்டப்பகலில் லாரி நிறுவன உரிமையாளா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். புதுக்கோட்டை எஸ்.எஸ். நகரைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

தேவன்பட்டியில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம்

பொன்னமராவதி அருகே தேவன்பட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.வாா்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டியில் உழவடை விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்காத... மேலும் பார்க்க