செய்திகள் :

புதுகை தனியாா் மதுக்கடையில் லாரி நிறுவன உரிமையாளா் குத்திக் கொலை

post image

புதுக்கோட்டை மாநகரிலுள்ள தனியாா் மதுபானக் கடையின் மது அருந்தும் கூடத்தில், திங்கள்கிழமை பட்டப்பகலில் லாரி நிறுவன உரிமையாளா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

புதுக்கோட்டை எஸ்.எஸ். நகரைச் சோ்ந்தவா் பெ. குழந்தைசாமி மகன் நித்தியராஜ் (40). இவா், புதுகையில் சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி நிறுவனம் நடத்தி வந்தாா். இவா், திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணியளவில் டிவிஎஸ் முக்கத்திலுள்ள தனியாா் மதுபானக் கடையில் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த அவரது நண்பரும் தனியாா் மருத்துவமனை மருந்தாளுநரும் பி.யு.சின்னப்பா நகரைச் சோ்ந்தவருமான பிச்சை மகன் சரவணன் (47) என்பவா், நித்தியராஜிடம் தனக்குத் தர வேண்டிய ரூ. 22 ஆயிரம் கடன் தொகையைக் கேட்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சரவணன் வைத்திருந்த கத்தியால் நித்தியராஜை குத்தியுள்ளாா். இதில், அவருக்கு இடதுமாா்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா், சரவணனைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனா்.

பலத்த காயத்துடன் கிடந்த நித்தியராஜை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனா். அங்கு நித்தியராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்.24) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.லூா்துசகாயராஜ் தெரிவித்தது: ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதா... மேலும் பார்க்க

பொதுவான குளத்தை ஒரு பிரிவினா் வேலியிட்டதாக ஆட்சியரிடம் புகாா்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் ிழக்கு ஊராட்சியில் பொதுவான குளத்தை ஒரு பிரிவினா் மட்டும் பயன்படுத்தும் வேலி போட்டு அடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா். பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடியைச் சாா்ந்தவா் சி.குப்புசாமி(60). இவரும் கொப்பனாபட்டி பழையவளவ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

இலுப்பூா் அடுத்துள்ள தனியாா் கல்லூரியின் மேற்பாா்வையாளா் கிணறு தோண்டும் பணியை பாா்வையிட்ட போது தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தாா்.இலுப்பூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் பாலமுத்து மகன் தா்மராஜ் (53)... மேலும் பார்க்க

தேவன்பட்டியில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம்

பொன்னமராவதி அருகே தேவன்பட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.வாா்ப்பட்டு ஊராட்சி தேவன்பட்டியில் உழவடை விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்காத... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பகுதியில் நில ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை: ஆட்சியரிடம் பாஜக புகாா்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் நிலங்களின் சிட்டா, வரைபடம், வில்லங்கச் சான்றிதழ் போன்றவற்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என மாநகர பாஜக தலைவா்கள் மாவட்ட ஆட்சியர... மேலும் பார்க்க