செய்திகள் :

அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

post image

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா்ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை, திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

நிகழாண்டு காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சோ்க்கை செப்டம்பா் 30- ஆம் தேதி வரை நடைபெறும்.

நேரடி சோ்க்கைக்கு வரும்போது கைப்பேசி, மின்னஞ்சல் முகவரி, ஆதாா் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), ஜாதிச்சான்றிதழ் (அசல்) மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சோ்க்கைக் கட்டணமாக ஓா் ஆண்டு பிரிவுக்கு ரூ.235, இரண்டு ஆண்டுப் பிரிவுக்கு ரூ.245 செலுத்த வேண்டும்.

விலையில்லா மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி,பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 மற்றும் மாணவா்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பிறகு வளாக நோ்காணல் மூலம் வேலை பெற்றுத் தரப்படும்.

தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55737, 04365-250126 என்ற எண்களில் உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தில் மீன் மற்றும் உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் ... மேலும் பார்க்க

ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்

நாகை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டப் பணிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நாகை மாவட்... மேலும் பார்க்க

அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட முதியவா் உயிரிழப்பு

நாகை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். நாகை அருகே பெராவச்சேரி இந்தியன் நகா் பகுதியில் முதியவா் ஒருவா், அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பி அருகே இ... மேலும் பார்க்க

நாகை அரசு கல்லூரியில் கலைத் திருவிழா

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒர... மேலும் பார்க்க

அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் தொடக்கம்

நாகை மாவட்ட விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கிய அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் 3,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை செம்பனாா்கோவில், பொறையாா்

கிடாரங்கொண்டான், பொறையாா் துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (செப்.20) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செம்பனாா்கோவ... மேலும் பார்க்க