செய்திகள் :

மோடி அரசுக்கு நன்றி: சமூக வலைதளங்களில் படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்!

post image

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி எனக் கூறி சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக தலைவர்கள் புகைப்படங்களை மாற்றியுள்ளனர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் நடுத்தர மக்கள் பயன்பெறுவதை சுட்டிக்காட்டும் வகையில், ஜிஎஸ்டி குறைப்பு மிகப்பெரிய பரிசு என்றும், பிரதமர் மோடி அரசுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டு படங்களை மாற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்மூலம், அன்றாட அத்தியாவசியப் பொருள்கள், சுகாதாரப் பொருள்கள், மின்னணு சாதனங்கள், கல்விப் பொருள்களின் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், ஆட்டோமொபைல்கள், விவசாயம், பொம்மைகள், விளையாட்டு மற்றும் கைவினைப்பொருள்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், காப்பீடு போன்ற துறைகளில் ஜிஎஸ்டி வரி குறைகிறது.

இந்த ஜிஎஸ்டி குறைப்பு, நடுத்தர குடும்பங்கள் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கும், அதிகமாகச் சேமிக்க ஊக்குவிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தனது உரையில் தெரிவித்திருந்தார்.

நவராத்திரி, தீபாவளி போன்ற அடுத்தடுத்த பண்டிகை நாள்களையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், நாட்டின் தாய்மார்கள், சகோதரிகளுக்கு மோடி அரசின் பரிசு என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சமூக வலைதளப் பக்கங்களில் பாஜக தலைவர்கள் தங்கள் முகப்புப் படங்களை மாற்றியுள்ளனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்கள் படங்களை மாற்றியுள்ளனர்.

இதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, ''ஜிஎஸ்டி குறைப்பு மிகப்பெரிய பரிசு, பிரதமர் மோடி அரசுக்கு நன்றி'' எனக் குறிப்பிட்டு படங்களை மாற்றியுள்ளனர்.

இதையும் படிக்க |மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்

Thank you to Prime Minister Modi's government: BJP leaders who changed their image on social media

ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

புது தில்லி: புது தில்லியில் ஜெ. பி. நட்டாவை இன்று(செப். 22) நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். இதற்காக சென்னையிலிருந்து இன்று(செப். 22) பகல் தில்லிக்கு புறப்பட்டுச் சென்ற தமிழக பாஜக தலைவர் நயி... மேலும் பார்க்க

மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்

மாணவர்கள் நலனில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொ... மேலும் பார்க்க

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அடுத்த 3 மணிநேரத்துக... மேலும் பார்க்க

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பதப்... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்துவி... மேலும் பார்க்க

தில்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! காரணம் என்ன?

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.சேலத்தில் நேற்று(செப். 21) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாட... மேலும் பார்க்க