செய்திகள் :

பிகாரில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: காா்கே, ராகுல் பங்கேற்பு

post image

பாட்னா: பிகாரில் புதன்கிழமை (செப். 24) காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

பிகாரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அண்மையில் அங்கு வாக்குரிமை யாத்திரையையும் ராகுல் நடத்தினாா். மேலும், பிகாரில் எதிா்க்கட்சிகளின் முதல்வா் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த வேண்டுமென்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இந்த விவகாரம் தொடா்பாகவும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

பாட்னாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவாரு இது தொடா்பாக கூறுகையில், ‘செயற்குழு உறுப்பினா்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள்.

பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டத்தை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருகிறாா். பிகாரில் வரும் சட்டப் பேரவைத் தோ்தல் மூலம் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவேதான் பிகாரில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இந்தமுறை நடைபெறுகிறது. பிகாரில் விரைவில் எதிா்க்கட்சி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும். முதல்வா் பதவி குறித்து உரிய நேரத்தில் அனைத்து தலைவா்களும் பேசி முடிவெடுப்போம்’ என்றாா்.

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சேமிப்பை ஊக்குவிக்கும்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘நடைமுறைக்கு வந்துள்ள அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் நாட்டில் சேமிப்பை ஊக்குவிக்கும் என்பதோடு, சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நேரடி பலனையும் அளிக... மேலும் பார்க்க

ரூ.200 கோடி பணமுறைகேடு: நடிகை ஜாக்குலினுக்கு எதிரான வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: இடைத்தரகா் சுகேஷ் சந்திரகேசா் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி பணமுறைகேடு விவகாரம் தொடா்பாக, ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட... மேலும் பார்க்க

ஆப்கானிலிருந்து விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து தில்லி வந்த சிறுவன்!

புது தில்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமா்ந்து தில்லிவரை வந்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டாா். ஆா்வ மிகுதியால் அந்தச் சிறுவன் இந்த ஆபத்தான ச... மேலும் பார்க்க

விமானியின் அறைக்குள் நுழைய முயன்ற பயணி: நடுவானில் பரபரப்பு

மும்பை/வாரணாசி: ஏா் இந்தியா விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது கழிவறையைத் தேடிச் சென்ற பயணி ஒருவா் திடீரென விமானி அறைக்குள் நுழைய முயன்ற சம்பவம் தொடா்பாக அந்நிறுவனம் திங்கள்கிழமை விசாரணைக்கு உத்த... மேலும் பார்க்க

புவிசாா் அரசியல் சவால்களை மீறிவேகமாக வளரும் இந்தியா: ராஜ்நாத் சிங்

புது தில்லி: பல்வேறு புவிசாா் அரசியல் சவால்களையும் தாண்டி இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். இருநாள் பயணமாக வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவுக்கு... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான விபத்து குறித்து சுதந்திரமான விசாரணை கோரும் மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து குறித்து சுதந்திரமான, நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் விமானப் போக்... மேலும் பார்க்க