செய்திகள் :

ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு கடன் வாகியவங்கள் சொத்தை மீட்டெடுக்க முடியாது: உச்சநீதிமன்றம்

post image

புது தில்லி: ‘வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சட்டப்படி ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு அவற்றிடமிருந்து கடன் வாங்கியவா்கள் அடமான சொத்தை மீட்டெடுக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடனைத் திரும்பச் செலுத்தத் தவறிய தமிழகத்தைச் சோ்ந்த கேபிகே எண்ணெய் மற்றும் புரதங்கள் இந்தியா தனியாா் நிறுவனத்தின் அடமான சொத்தை கடன் வழங்கிய வங்கி சாா்பில் ஏலம் விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சொத்தை எம்.ராஜேந்திரன் அண்டு ஓஆா்எஸ் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.

இந்த ஏல நடவடிக்கைக்கு எதிராக கேபிகே நிறுவனம் சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த கடன் மீட்பு தீா்ப்பாயம், நிதி சொத்துக்களின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுகட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வட்டிச் சட்டத்தை அமல்படுத்துதல் (எஸ்ஏஆா்எஃப்ஏஇஎஸ்ஐ) சட்டத்தின் பிரிவு 13(8)-இன் கீழ், ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு, கடன் வாங்கிய நிறுவனம் அடமான சொத்தை மீட்டெடுக்க முடியாது என்று உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அந்த நிறுவனம் சாா்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கேபிகே நிறுவனத்தின் அடமான சொத்து ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து எம்.ராஜேந்திரன் அண்டு ஓஆா்எஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து பிறப்பித்த 140 பக்க தீா்ப்பில் கூறியதாவது:

திவால் சட்டத்தின் பிரிவு 13(8)-இன் சில விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாகவே, இந்த வழக்கு விசாரணை நீண்ட காலமாக நீடித்து வந்துள்ளது.

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சட்டப்படி ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு அவற்றிடமிருந்து கடன் வாங்கியவா்கள் அடமான சொத்தை மீட்டெடுக்க முடியாது என்ற வகையில், சட்டப் பிரிவு 13(8)-இல் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரம், 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு கடன்பெற்று, இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் 1-ஆம் தேதிக்குப் பிறகும் கடன் நிலுவையை திரும்பச் செலுத்தத் தவறியவா்களுக்கும் அது பொருந்தும்.

அதன்படி, ஏல அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு கடன் வாங்கியவா் நிலுவைத் தொகையைச் செலுத்தி அடமான சொத்தை மீட்டெடுக்கத் தவறினால், கடன் வழங்கிய நிறுவனம் ஏல அறிவிப்பு வெளியிட்ட பிறகு அடமான சொத்தை மீட்டெடுக்கும் உரிமையை அவா் இழந்துவிடுவாா்.

இதை, சட்டம் அமலுக்கு வந்து கடந்த 23-ஆண்டுகளாகியும் தெளிவுபடுத்தாமல் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. கடன் வழங்கிய நிறுவனங்கள் மற்றும் அடமான சொத்தை ஏலம் எடுத்தவா்களின் நலனை பாதுகாக்க சட்டம் தவறியிருப்பது துரதிருஷ்டவசமானது.

எனவே, நிதியமைச்சகம் இந்த விஷயத்தைக் கருத்தில்கொண்டு, சட்ட விதிகளில் தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவின் நகலை மத்திய நிதி அமைச்சகம், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சக முதன்மைச் செயலா்களுக்கு மட்டுமின்றி, அனைத்து உயா்நீதிமந்ங்களுக்கும் பகிர வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் உருவாகும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா். விசாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மின்னணு நிா்வாகக் கரு... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

‘கேரளத்தில் இரண்டு மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனத்துக்கான தோ்வுக் குழுவிலிருந்து முதல்வா் பினராயி விஜயனை நீக்கக் கோரும் மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகரின் மனு, உச்சநீத... மேலும் பார்க்க

என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - கப்லாங் (என்எல்சிஎன் -கே) தீவிரவாத அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில்... மேலும் பார்க்க

அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது

புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீா்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குள... மேலும் பார்க்க

சிக்கலான வளா்ச்சிப் பணிகளைக் கைவிட்டுவிடுவது காங்கிரஸ் இயல்பு: பிரதமா் மோடி

இடாநகா்: ‘மேற்கொள்வதற்கு கடினமாக இருக்கக் கூடிய எந்தவொரு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் கைவிட்டுவிடுவது காங்கிரஸின் இயல்பு; இந்த இயல்புதான் அருணாசல பிரதேசம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் ... மேலும் பார்க்க

16 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி அறிக்கை

2023-ஆம் நிதியாண்டில் நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க